Advertisment

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த அரண்மனை 4 : நடப்பு ஆண்டில் 3-வது படமாக புதிய சாதனை

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அரண்மனை 4 திரைப்படம் ரூ 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Aranmanai 4 Movie

அரண்மனை 4 படம்

நடப்பு ஆண்டில் 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஒரு ஹிட் கிடைக்க போராடி வந்த கோலிவுட் சினிமாவுக்கு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில், ரூ100 க்ளப்பில் இணைந்துள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் காமெடி இயக்குனர் என்று அழைக்கப்படும் சுந்தர்.சி இயக்கத்தில் ஏற்கனவே வெளியான அரண்மனை படங்கள் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்த நிலையில். கடந்த மே 3-ந் தேதி அரண்மனை படத்தின் 4-வது பாகம் வெளியானது. சுந்தர்.சி, தமன்னா, ராஷிகண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.

படத்தின் க்ளைமேக்ஸ் பாடலுக்கு குஷ்பு மற்றும் சிம்ரன் நடனமாடியிருந்தனது. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று, நேர்மறையாக விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தற்போது அரண்மனை 4 திரைப்படம் 20 நாட்களில் ரூ100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு்ளளது. இதன் மூலம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சாதனையை எட்டிய சில படங்களில் இதுவும் ஒன்று என்றும் கூறுகிறது.

ஏற்கனவே தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் துறைகள் மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகளுக்கு பலன் கிடைத்து வரும் அதே வேளையில், அரண்மனை 4, வழக்கமான திரைப்படம்தான் என்பதால், தமிழ் சினிமாவின் நிலை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.

படத்தின் வெற்றிக்கு பல காரணிகள் இருக்கின்றன. இதில் முதலாவதாக, அரண்மனை தொடர் பல ஆண்டுகளாக ஒரு ஒரு மினமம் கேரண்டி வெற்றி சீரியஸாக உள்ளது. படத்தின் திகில் மற்றும் நகைச்சுவை கலவை ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவதாக, தமிழ் சினிமாவில் ஹாரர்-காமெடி வகை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், நகைச்சுவை படங்களுக்கு பெயர் பெற்ற சுந்தர் சி, இயக்கத்திற்காகவே பலரும் திரையரங்குக்கு வருகின்றனர்.

அதற்கு மேல், அரண்மனை 4 வெளியாகும் நேரம் அவருக்கு சாதகமாக இருந்தது. ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ் சினிமா பாக்ஸ்ஆபீஸ் வறட்சியை சந்தித்து வருகிறது. மேலும் போட்டிக்கு படங்கள் இல்லை என்பதால் அரண்மனை 4 அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் அரண்மனை 4 இன் வெற்றி திரைப்படத் துறையில் ஒரு பழமையான நிகழ்வை எடுத்துக்காட்டுகிறது.

ஒரு படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றாலும் அது விமர்சன வரவேற்புடன் ஒத்துப்போவதில்லை. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ரசிகர்களின் விருப்பத்தேர்வுகள் மற்றும் படத்தின் குறிப்பிட்ட சில அம்சங்கள் ஆகியவை ஒரு படத்தின் விதியைத் தொடர்ந்து தீர்மானிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment