Advertisment

அரசியல் கட்சியால் சிக்கி தவித்த ஏ.வி.எம்: உதவ மறுத்த அண்ணா, கலைஞர்; காரணம் இதுதான்!

ஏ.வி.எம். நிறுவனத்தில் படத்திற்கு அரசியில் கட்சியினாரால் தடை ஏற்பட்டபோது அண்ணாவும் கலைஞரும் உதவி செய்ய மறுத்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AVM KUmarsn NAd

அண்ணா - கலைஞர் - ஏ.வி.எம் குமரன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் அமலில் இருந்தபோது, தமிழ் சினிமாவில் வெளியான ஒரு படத்தின் இந்தி ரீமேக் படத்தில் வட இந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த நிலையை சாதுர்யமாக ஏ.வி.எம்.நிறுவனம் கையாண்டுள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்த ஏ.வி.எம். நிறுவனம் சார்பில் கடந்த 1965-ம் ஆண்டு வெளியான படம் குழந்தையும் தெய்வமும். ஆங்கிலத்தில் வெளியான தி பேரண்ட் ட்ராப்ஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜெய்சங்கர் நாயகனாக நடித்திருந்தார். தி பேரண்ட் ட்ராப்ஸ் படத்தை தமிழில் எடுக்க ஆசைப்பட்ட ஏ.வி.எம் குமரன், இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தருக்கு இந்த படத்தை காட்டியுள்ளார்.

படத்தை பார்த்த ஏ.சி.திரிலோகச்சந்தர், இந்த படம் இந்திய மொழியில் எடுத்தால் கண்டிப்பாக ஓடாது என்று கூறியுள்ளார். அவரின் பேச்சை கேட்ட ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார், அந்த படத்தை தமிழில் படமாக்கும் முயற்சியை கைவிட்டாலும்,  ஏ.வி.எம் குமரன் இந்த படம் தமிழில் கண்டிப்பாக வெற்றி பெறும், என்ற நம்பிக்கையில் திரைக்கதை ஆசிரியர் ஜாவர் சீதாராமிடம் சென்று படத்தை காட்டியுள்ளார். அவர் இந்த கதையில் மாற்றம் செய்து உருவான படம் தான் குழந்தையும் தெய்வமும்.

கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், வசூலிலும் பெரிய சாதனை படைத்தது. அதன்பிறகு தெலுங்கில் எடுக்கப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்ற இந்த படம், காளியான் என்ற பெயரில் இந்தியில் எடுக்கப்பட்டது. இந்தியில் அப்போது 2-ம் தர நடிகர்களை வைத்து ஒருவாக்கப்பட்ட இந்த படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்துள்ளனர். ஆனால் மக்கள் மத்தியில் சரியாக பெயர் வாங்காத சூப்பர் என்ற தியேட்டர் மட்டும் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

இந்த தியேட்டரில், சீட் சரியாக இல்லாத நிலையில், அனைத்து சீட்டுகளையும் புதிதாக மாற்றி, இதர வசதிகளை செய்துகொடுத்து ஏ.வி.எம். நிறுவனம் தனது காளியான் படத்தை இந்தியில் வெளியிட்டுள்ளது. இந்தியிலும் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், 10 நாட்களுக்கு பின் அரசியல் கட்சியின் அழுத்தம் காரணமாக படம் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் காரணமாக இந்தி படம் வெளியாகாததால், சென்னையில் எடுக்கப்பட்ட இந்தி படத்தை இங்கு திரையிட மாட்டோம் என்று ஒரு அரசியல் கட்சி கூறியுள்ளது.

இந்த கேட்ட ஏ.வி.எம்.குமரன், தனது அப்பா மெய்யப்ப செட்டியாருடன் சென்று, அப்போது தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பில் முன்னணியில் இருந்த அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரை சந்தித்துள்ளனர். ஆனால் எங்கள் கொள்கையில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். உங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் இந்தி படத்தை திரையிட மாட்டோம் என்று கூறியுள்ளனர். அதன்பிறகு அண்ணா ஒரு நபரை சொல்லி அவரை போய் பார்த்துள்ளனர்.

அவர் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள ஒரு தியேட்டரில் நீங்களே மக்கள் கூட்டத்தை தயார் செய்து, ஒரு இந்தி படத்தை திரையைிட்டு, அதற்கான ஆதராங்களை தயார் செய்யலாம் என்று கூறியுள்ளார். அதன்படி செய்து, வட இந்தியாவில் பிரபலமான சினிமா பத்திரிக்கையின் 2 ரிப்போர்ட்டர்களை வரவழைத்து தமிழகத்தில் இந்திப்படம் வெளியாகியுள்ளது என்று செய்தியை வெளியிட செய்துள்ளனர். அப்படி வெளியான செய்தியின் பேப்பரை எடுத்துக்கொண்டு அந்த அரசியல் கட்சி தலைவரை சந்தித்துள்ளார் ஏ,வி.எம்.குமரன்.

அதை ஏற்றுக்கொண்ட அந்த அரசியல் கட்சி தலைவர் எங்களுக்கு நன்றி என்ற கார்டுடன் படம் வெளியாக வேண்டும் என்ற கண்டிஷனுடன் குழந்தையும் தெய்வமும் படத்தின் இந்தி பதிப்பானா காளியான் படம் வெளியாக அனுமதி அளித்துள்ளார். அப்படி வெளியான இந்த படம் 25 வாரங்கள் ஓடி பெரும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இந்த தகவலை ஏ.வி.எம்.குமரன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment