திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் தலைவர் அறிஞர் அண்ணா, சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட இவர், 1949-ம் ஆண்டு வெளியான வேலைக்காரி என்ற படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்த அண்ணா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து திராவி முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்.
Advertisment
இந்த திராவிட முன்னேற்ற கழகத்தில், எம்.ஜி.ஆர் கருணாநிதி என திரைத்துறையை சேர்ந்த பலரும் பொறுப்பு வகித்திருந்தனர். சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள அறிஞர் அண்ணா, நல்ல தம்பி, ஓர் இரவு, சகோதரர்கள் உள்ளிட்ட படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியுள்ளார். அதேபோல், ரங்கோன்ராதா, நல்லவன் வாழ்வான் உள்ளிட்ட சில படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.
இதில் த்ரில்லர் படமாக அமைந்த ஓர் இரவு படத்தின் கதையை ஒரு நாள் இரவிலேயே எழுதி முடித்துள்ளார். இந்த படததின் கதையும் ஒருநாள் இரவில் நடப்பது போன்றுதான் அமைக்கப்பட்டிருக்கும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில், கதாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா என்ற பன்முக திறமையை வெளிப்படுத்தியிருந்தாலும், தனது திரை வாழ்க்கையில் ஒரே ஒரு பாடலை மட்டுமே அண்ணா எழுதியுள்ளார்.
கடந்த 1970-ம் ஆண்டு ஜெய்சங்கர் – காஞ்சனா நடிப்பில் வெளியான படம் காதல் ஜோதி. திருமலை மகாலிங்கம் என்பவர் இந்த படத்தை இயக்கிய நிலையில், படத்திற்கு அண்ணா கதை எழுதியதோடு மட்டுமல்லாமல் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். ‘’உன் மேல கொண்ட ஆசை’’ என்ற இந்த பாடலை அண்ணா எழுதியிருந்தாலும், அவர் மரணத்திற்கு பின்பே இந்த பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது பாடல் பதிவின்போது, சில இடங்களில் வார்த்தைகள் மாறற் வேண்டும் என்று இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி கேட்டுள்ளார்.
Advertisment
Advertisements
அந்த நேரத்தில் அண்ணா உயிருடன் இல்லை என்பதால், கவிஞர் சுப்பு ஆறுமுகம், இந்த பாடலுக்கான சில வார்த்தைகளை மாற்றி கொடுத்துள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அண்ணா எழுதிய ஒரே ஒரு திரைப்பாடல், அவர் மரணத்திற்கு பின்பே வெளியானது என்பது சோகம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“