Advertisment

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேனா? ஷாக்கான கோபி... திடீர் விளக்கம்

கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இதற்கு முன்பு நண்பர்களாக இருந்த பாக்யாவும் ராதிகாவும் தற்போது எதிரிகளாக மாறிவிட்டனர்.

author-image
WebDesk
New Update
What next in Bhakyalakshmi serial

கோபி

விஜய்டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் இருந்து கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் விலக உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. திருமணத்திற்கு மீறிய உறவு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பலவற்றை பற்றி எடுத்து கூறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இதற்கு முன்பு நண்பர்களாக இருந்த பாக்யாவும் ராதிகாவும் தற்போது எதிரிகளாக மாறிவிட்டனர். அதேபோல் தான் இல்லை என்றால் பாக்யா ஒன்றுமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த கோபிக்கு பாக்யாவின் முன்னேற்றம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

இதனிடையே ஏற்கனவே ராதிகாவின் ஆபீஸில் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுக்க சென்ற பாக்யாவிடம் ராதிகா இங்கிலீஷில் கேள்விகள் கேட்டு மிளர வைத்துவிட்டார். ஆனாலும் பிடிகொடுக்காத பாக்யா இப்போதான் புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். இதையும் கற்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

தற்போது இங்கிலீஷ் கற்றுக்கொள்ள சென்ற இடத்தில் அவரை போல் நடிகர் ரஞ்சித் ஸ்டூடன்டாக வருகிறார். இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இனி ரஞ்சித் தொடர்பான கட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் எனது காட்சிகள் ரொம்ப குறைய வாய்ப்பு உள்ளது என்று நடிகர் சதீஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகர் சதீஷ் புதிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், நான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு வீடியோவில், ரஞ்சித் சார் தொடர்பாக காட்சிகள் அதிகமாகும். என் காட்சிகள் குறைய வாய்ப்பு உள்ளது என்று சொன்னேன். இதை வைத்துக்கொண்டு கோபி பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறார் என்று சொல்லிவிட்டார்கள்.

என்னயா சொல்றது தலையெழுத்து. என் நடிப்பை பற்றி பாக்கியலட்சுமி சீரியல் பற்றி நீங்கள் பேசுவதற்கு முக்கிய காரணம் சேனல், இயக்குனர் எழுத்தாளர் ஆகியோர்தான். அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் வாழ்க்கையில் பல தேர்வுகள் உள்ளது. பல கேள்விகள் உள்ளது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதில் இருக்கும். அவரவர் கேள்விகளுக்கு அவரவர்தான் பதில் எழுத வேண்டும். உங்கள் கேள்விகளை நீங்கள் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment