க்ளாசிக் தமிழ் சினிமாவில், சவுக்கார் ஜானகி சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துவிட்டதால், தனக்கு நடிக்க வாய்ப்பு இல்லை, படத்தின் நாம் வில்லி என்பதை உணர்ந்த நடிகை பானுமதி வேண்டுமென்றே இருமல் வந்தது போல் நடித்து படப்பிடிப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என பன்முக திறமை கொண்ட நடிகை என்று பெயரேடுத்த பானுமதி, தமிழில் பல படங்கில் நடித்துள்ளார். ஒரு மொழில் ஒரு நடிகர் நடித்த படத்தை ரீமேக் செய்யும்போது இந்த கேரக்டரில் நடித்தால் ஒரிஜினல் படத்தில் நடித்தவரை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கும் பானுமதி, தன்னை விட சிறப்பாக நடித்த ஒரு நடிகையை பார்த்து கடுப்பாகி லைவ் ரெக்கார்டிங்கில் இருமல் வந்தது போல் நடித்துள்ளார்.
1962-ம் ஆண்டு ஏ.வி.எம்.தயாரிப்பில், கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் அன்னை. பானுமதி – சவுக்கார் ஜானகி ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்தில் பானுமதிக்கு குழந்தை இருக்காது. அவரது தங்கையான சவுக்கார் ஜானகிக்கு குழந்தை இருக்கும் நிலையில், அந்த குழந்தையை அவர்களால் வளர்க்க முடியாத நிலை இருக்கும். இதனால் பானுமதி அந்த குழந்தையை தத்தெடுத்துக்கொண்டு, சவுக்கார் ஜானகிக்கும் அந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிடுவார்.
ஒருமுறை அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவம் பார்க்க பணம் இல்லாத சவுக்கார் ஜானகி, கோவில்ல சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து மகனுக்கு வியூதி வைக்க போகும்போது அதை பானுமதி தடுத்துவிடுவார். இந்த காட்சியில், என் மகனுக்கு விபூதி வைக்க கூட விடமாட்டாயா என்று சவுக்கார் ஜானகி அழுது புலம்பி சிறப்பாக நடித்திருந்தார். அவரின் நடிப்பை பார்த்த பானுமதி, இவரே சூப்பரா நடித்துவிட்டார்.
சவுகார் ஜானகி நடிப்பால் நாம் வில்லி என்று ஆக்கப்படுவோம் என்று உணர்ந்து, ஆடியோ லைவாக ரெக்கார்டிங் ஆகும்போது வேண்டுமென்றே இருமல் வந்தது போன்று நடித்துள்ளார். இதனால் இயக்குனர் கட் என்று சொல்ல, மீண்டும் அந்த காட்சியை படமாக்கும் நிலை உருவாகியுள்ளது. அதன்பிறகு மீண்டும் படமாக்கும்போது முதல் காட்சியில் வந்த அந்த நடிப்பு சவுகார் ஜானகிக்கு வரவில்லை. இதனால் நிம்மதியாக நடித்த பானுமதி, இயக்குனர் 2-வதாக படமாக்கப்பட்ட காட்சியை தான் வைப்பார் என்று நினைத்து மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.
அதே சமயம் சவுகார் ஜானகியின் முதல் காட்சியையும், பானுமதியின் 2-வது காட்சியையும் இணைந்து படத்தில் சேர்த்துள்ளனர் இயக்குனர் கிருஷ்ணன் – பஞ்சு. பானுமதி வேண்டுமென்றேதான் படப்பிடிப்பில் இரும்பினார் என்பது சவுகார் ஜானகி உட்பட அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் அவர் ஒரு பெரிய நடிப்பை என்பதால், யாரும் கேட்க முடியவில்லை என்று ஏ.வி.எம்.குமரன், ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“