Advertisment

கடனில் மூழ்கிய சிவாஜி பட இயக்குனர்... கை கொடுத்த எம்.ஜி.ஆர் : சிவாஜி நிலை என்ன?

இயக்குனரும் தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்தலு 1957-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான தங்கமலை ரகசியம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

author-image
WebDesk
New Update
Sivaji MGR

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

தமிழ் க்ளாசிக் சினிமாவில் இரு துருவங்கள் என்றால் அது எம்.ஜி.ஆர் – சிவாஜி ஆகியோரை சொல்லலாம். இருவரும் வெவ்வேறு காலக்கட்டத்தில் சினிமாவில் நுழைந்திருந்தாலும், ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களாக மாறியிருந்தனர். அதிலும் குறிப்பாக 1950-60 களில் இவர்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் என்று சொல்லலாம்.

Advertisment

அன்றைய சினிமா காலத்தில், முன்னணி நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என தனித்தனி இயக்குனர்கள் இருந்தார்கள். ஏ.வி.எம், மாடர்ன் பிச்சர்ஸ், வாஹினி ஸ்டூடியோஸ், ஜெமினி ஸ்டூடியோஸ், தேவர் பிலிம்ஸ் என முன்னணி நிறுவனங்களுக்கு நிரந்தர இயக்குனர்கள் இருந்தனர். இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களுக்கு ஒருவரே தான் இயக்குனராக இருப்பார்.

அதேபோல், இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒரு நடிகைரை மட்டுமெ வைத்து படங்களை தயாரித்து வரும். இதில் குறிப்பாக எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களை இயக்கும் இயக்குனர்கள் சிவாஜி நடிக்கும் படங்களை இயக்க மாட்டார்கள். அதேபோல் சிவாஜி நடிக்கும் படத்தை இயக்கும் இயக்குனர்களுக்கு எம்.ஜி.ஆர் படத்தை இயக்க வாய்ப்பு இருக்காது. இதில் ஒரு சில இயக்குனர்கள் விதிவிலக்கு என்று சொல்லலாம்.

அந்த விதிவிலக்கான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்தலு. 1957-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான தங்கமலை ரகசியம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பந்தலு, தொடர்ந்து சிவாஜி நடிப்பில், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா, கர்ணன் உள்ளி்ட பல படங்களை இயக்கியிருந்தார்.

இதன் மூலம் சிவாஜி பட இயக்குனர் என்று முத்திரை குத்தப்பட்ட பி.ஆர் பந்தலு கர்ணன் படத்திற்கு பிறகு 1964-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் முரடன் முத்து என்ற படத்தை இயக்கி தயாரித்திருந்தார். அதே ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் நவராத்தி என்ற படத்திலும் சிவாஜி நடித்து வந்தார். அதற்கு முன்பு 99 படங்கள் நடித்திருந்த சிவாஜி, முரடன் முத்து படத்தை 100-வது படமாக அறிவிப்பார் என்று பி.ஆர்.பந்தலு எதிர்பார்த்தார்.

ஆனால் தான் 9 வேடங்களில் நடித்த நவராத்திரி படத்தை சிவாஜி தனது 100-வது படமாக அறிவித்துவிட்டார். இதனால் விரக்தியான பி.ஆர் பந்தலு, படத்தை இயக்கி முடித்தாலும் முரடன் முத்து சரியாக போகவில்லை. அதே சமயம், அதற்கு முன்பு சிவாஜ நடிப்பில் இயக்கிய கர்ணன் உள்ளிட்ட சில படங்கள் வசூலில் வீழ்ச்சியை சந்தித்ததால், பி.ஆர் பந்தலு கடனில் மூழ்கினார்.

இந்த கடனில் இருந்து மீள என்ன செய்வது என்று யோசித்த பந்தலு உடனடியாக எம்.ஜி.ஆரிடம் சென்று பேசியுள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் நல்ல கதையுடன் வாருங்கள் என்று சொல்ல, அப்போது பி.ஆர்.பந்தலு எழுதிய கதைதான் ஆயிரத்தில் ஒருவன் படம். பி.ஆர் பந்தலு இந்த படத்தை இயக்கி தயாரித்திருந்த நிலையில், எம்.ஜி.ஆர் அரசியல் நிலையால், படப்பிடிப்பில் தடை ஏற்பட்டதால் பி.ஆர் பந்தலு சிரமத்தை சந்தித்தார்.

அவரின் நிலையை உணர்ந்த எம்.ஜி.ஆர் கட்சி தலைமையிடம் பேசி, படப்பிடிப்புக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டார். அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாகவும் மாறியது. இந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை வைத்து தனது கடனை தீர்த்த பி.ஆர்.பந்தலு, அதன்பிறகு சிவாஜியுடன் இணைந்து பணியாற்றவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivaji Ganesan Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment