இன்றைய சினிமாவில் உலக நாயகன் அந்தஸ்துடன் வலம் வரும் கமல்ஹாசன் தனது முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்திலே அப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசனை இன்சல்ட் செய்ததாக ஏ.வி.எம். நிறுவனத்தின் குமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவில் புது டெக்னாலஜிகளை அறிமுகம் செய்து வைத்தவர் கமல்ஹாசன். சினிமாவில், அவருக்கு தெரியாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வரும் கமல்ஹாசன், 1954-ம் பிறந்த நிலையில், 1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கமல்ஹாசன், இன்று தமிழ் சினிமாவில் அடையளமாக திகழ்கிறார். அதே சமயம் தனது முதல் படத்தில் நாயகனாக நடித்த ஜெனிமி கணேசனை இன்சல்ட் செய்துள்ளார். பீம்சிங் இயக்கத்தில், வெளியான இந்த படத்தில், ஜெமினி கணேசன், சாவித்ரி இணைந்து நடித்திருந்த நிலையில், ஜெமினிணேசனின் மகனாக கமல்ஹாசன் நடித்திருந்தார்.
இந்த படத்தில் ‘’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’’ என்று கமல்ஹாசன் பாடுவது போன்று வரும் ஒரு பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் பல திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய நிலையில், படத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் திரையரங்குகளுக்கு சென்று வெற்றி விழாவை கொண்டா முடிவு செய்த ஏ.வி.எம். நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. சொன்னபடி அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.
Advertisment
Advertisements
இதனையடுத்து சென்னையில் ஒரு திரையரங்கிற்கு சென்ற படக்குழுவினர், இடைவேளை நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசியுள்ளனர். முதலில் ஜெமினி கணேசன், பேச அதன்பிறகு சாவித்ரி பேசியுள்ளார். இவர்கள் இருவருக்குமே கணிசமாக கைத்தட்டல்கள் கிடைத்த நிலையில், அடுத்ததாக கமல்ஹாசன் வருவார் என்று அறிவிக்கப்பட்டு படத்தில் வந்த அதே கிழிந்த சட்டையுடன் கமல்ஹாசன் என்ட்ரி கொடுத்துள்ளார்.
அவர் வரும்போது பின்னணியில் ‘’அம்மாவும் நீயே அப்பாவும் நீயோ’’ பாடலை போட்டுள்ளனர். இதற்காக ஜெமினி, சாவித்ரிக்கு கிடைத்த கைத்தட்டல்களை விட கமல்ஹாசனுக்கு அதிக கைத்தட்டல்கள் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த தியேட்டருக்கு சென்றபோதும் இதே மாதிரி கமல்ஹாசனுக்கு ஏ.வி.எம்.என்டரி கொடுத்துள்ளனர். அங்கேயும் கமல்ஹாசனுக்கு அதிக பாராட்டுக்கள் குவிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்த சென்னையில் 3-வது ஒரு தியேட்டருக்கு செல்லும்போது, ஜெமினி கணேசன் சாவித்ரி இருவரும் வரவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது, சின்னப்பயைன் அவனுக்கு அதிக பில்டப் கொடுத்து என்னை அசிங்கப்படுத்துறீங்க, என்னை விட்டுவிடுங்கள் என்னால் வர முடியாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு படக்குழு பல திரையரங்குக்குக்கு சென்றாலும் ஜெமினி சாவித்ரி இருவரும் பங்கேற்கவில்லை என்று ஏ.வி.எம்.குமரன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“