Advertisment

கமல்ஹாசனுக்கு இந்த பாட்டு செட் ஆகாது: படத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர்; அந்த பாட்டு பெரிய ஹிட்டு!

கமல்ஹாசனுக்கு 4 நிமிட பாடலை முழுமையாக வைக்க சொன்ன, தயாரிப்பாளரின் பேச்சை கேட்காத இயக்குனர் படத்தில் இருந்தே வெளியேறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kamal Haasan Kalathur

கமல்ஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்தில் அந்த ஹிட் பாடல் ஒரு நிமிடம் போதும் என்று சொன்ன தனது பேச்சை கேட்காததால் படத்தில் இருந்தே விலகியுள்ளார் அந்த படத்தின் இயக்குனர்.

Advertisment

தமிழ் சினிமாவில் புது டெக்னாலஜிகளை அறிமுகம் செய்து வைத்தவர் கமல்ஹாசன். சினிமாவில்,  அவருக்கு தெரியாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வரும் கமல்ஹாசன், 1954-ம் பிறந்த நிலையில், 1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கமல்ஹாசன், இன்று தமிழ் சினிமாவில் அடையளமாக திகழ்கிறார். அதே சமயம் தனது முதல் படத்தில் நாயகனாக நடித்த ஜெனிமி கணேசனை இன்சல்ட் செய்துள்ளார். பீம்சிங் இயக்கத்தில், வெளியான இந்த படத்தில், ஜெமினி கணேசன், சாவித்ரி இணைந்து நடித்திருந்த நிலையில், ஜெமினிணேசனின் மகனாக கமல்ஹாசன் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ‘’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’’ என்று கமல்ஹாசன் பாடுவது போன்று வரும் ஒரு பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த படத்தின் கதையை எழுதிய ஜாவர் சீதாராமன், ஏ.வி.எம் நிறுவனத்திடம் கதை சொல்ல, அவர்களுக்கு கதை பிடித்திருந்த்து. இந்த கதை அந்த சிறுவனின் மையமாகத்தான் செல்லும். அதனால் ஒரு சிறுவனை தயார் செய்யுங்கள் படம் ஹிட்டாகிவிடும் என்று கூறியுள்ளார்.

அப்போது ஏ.வி.எம்.குமரனுக்கு தெரிந்த ஒரு மருத்துவர் பரமக்குடியில் வேலை பார்க்க, அவர் கமல்ஹாசன் பற்றி அவர்களிடம் கூறிவிட்டு, கமல்ஹாசன் வீட்டிலும் ஏ.வி.எம்.பற்றி கூறியுள்ளார். அதன்பிறகு ஏ.வி.எம்.நிறுவனத்திடம் கமல்ஹாசனை காட்டுவதற்காக அவரது குடும்பம் சென்னை வந்துள்ளது. அப்போது தனது வீட்டில் கமல்ஹாசனை சந்தித்த ஏ.வி. மெய்யப்ப செட்டியார், நீ நடிப்பியா என்று கேட்க, நடிப்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். 

எங்கே நடித்து காட்டு என்று ஒரு மேசை மீது ஏற்றிவிட, கமல்ஹாசன் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் வசனத்தை பேசி நடித்துள்ளார். இதை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் கமல்ஹாசனை இந்த படத்திற்காக தேர்வு செய்து, படத்தின் இயக்குனர் பிரகாஷ் ராவிடம் அனுப்பி வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய போதே இயக்குனர் பிரகாஷ் ராவுக்கும் ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. ஆனாலும் படப்பிடிப்பு சிறப்பாக நடந்துள்ளது. 

ஒரு கட்டத்தில், படத்தின் ஹிட் பாடலான அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடலை படமாக்கும்போது, இது சின்ன பையன் பாடும் பாட்டு 4 நிமிடங்கள் யாரும் ரசிக்க மாட்டார்கள் அத்தை ஒன்னறை நிமிடமாக மாற்றிக்கொள்ளுங்கள் என்று இயக்குனர் பிரகாஷ் ராவ் கூறியுள்ளார். இதை கேட்டு, எடிட்டரும் ஒன்னறை நிமிடமாக மாற்றியுள்ளார். எடுத்தவரை படத்தை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், என்ன 4 நிமிட பாட்டு ஒன்னறை நிமிடம் தான் இருக்கு என்று கேட்டுள்ளார். 

அதை கேட்ட உதவியாளர்கள் இயக்குனர் பிரகாஷ் ராவ் தான் அப்படி செய்ய சொன்னார் என்று சொல்ல, படத்தில் 4 நிமிட பாடல் முழுவதுமாக வேண்டும் என்று ஏ.வி.மெய்யப்ப செட்டியார் கூறியுள்ளார். இது பற்றி தெரிந்துகொண்ட பிரகாஷ்ராவ், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் கேட்க, ஆமாம் 4 நிமிட பாடலும் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் சிறுவன் கிழிந்த சட்டையுடன் பாடும் பாட்டு யாரும் ரசிக்க மாட்டார்கள் என்று பிரகாஷ் ராவ் கூறியுள்ளார். 

இதை கேட்ட ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 4 நிமிட பாடலும் வேண்டும் உங்களால் முடித்தால் எடுங்கள் இல்லை என்றால் நான் வேறு ஒருவரை வைத்து எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்ல, இயக்குனர் பிரகாஷ்ராவ் தன் வீட்டுக்கு சென்று, நான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.  அதன்பிறகு இந்த படம் பீம்சிங் இயக்கத்தில் படமாக்கப்பட்டது. கதை எப்படி இருந்த்தோ அமைப்படியே படமாக்கி கொடுத்த பீம்சிங் 4 நிமிட பாடலை முழுமையாக எடுத்து கொடுத்தார் என ஏ.வி.எம்.குமரன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment