/indian-express-tamil/media/media_files/xtlzyeQ2YUL6fOkJhdwm.jpg)
கமல்ஹாசன் - கண்ணதாசன்
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட கவியரசர் கண்ணதாசன் கமல்ஹாசனுக்கு எழுதிய பாடல் பிடிக்கவில்லை என்றாலும், அந்த பாடலுக்கான கண்ணதாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கவிஞர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் கண்ணதாசன். தான் எழுதிய அனைத்து பாடல்களுமே படத்தின் சூழ்நிலை மட்டும்லலாமல் தான் சொந்த வாழ்வில் சந்தித்த அனுபவங்களையும் இணைத்து எழுதியிருப்பார். இதனால் காரணமாக அவரது பாடல்கள் காலத்தை கடந்தும் இன்றுவரை நிலைத்திருக்கிறது.
படத்தின் கதையில் பாடல் வரும் சூழ்நிலையை சொல்லிவிட்டால், உடனடியாக பாலை கொடுத்துவிடும் கண்ணதாசன், கமல்ஹாசனுக்கு முதல்முறையாக எழுதிய பாடலை கமல்ஹாசன் வேண்டாம் என்று கூறியுள்ளார். அதே சமயம் அந்த பாடலை எழுதியதற்காக நன்றியும் தெரிவித்துள்ளார். 1981-ம் ஆணடு சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படம் ராஜபார்வை.
கமல்ஹாசன் கதை எழுதி தயாரித்து நடித்த இந்த படம் அவரின் 100-வது படமாக அமைந்தது. படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அழகே அழகு என்ற ஒரு பாடலை மட்டும் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த பாடலுக்கு முன்னதாக ராஜபார்வை என்று தொடங்கும் ஒரு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். இந்த பாடலை பார்த்த கமல்ஹாசன் இந்த பாடல் பிடிக்கவில்லை வேறு பாடல் எழுதி கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
அதே சமயம் இந்த பாடலில் ராஜபார்வை என்ற வார்த்தையை கொடுத்து எங்கள் படத்திற்கு டைட்டில் கிடைக்க செய்துவிட்டீர்கள் அதற்காக நன்றி என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். அதன்பிறகு தான் இந்த படத்தில் அழகே அழகு என்ற பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். கமல்ஹாசனின் 100-வது படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக ராஜபார்வை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.