வாணொலியில் ஒரு பாடலை கேட்ட கவியரசர் கண்ணதாசன், அந்த பாடலை எழுதியது தான் தான் என்ற நினைத்துக்கொண்டிருக்க, அந்த பாடலை எழுதியவர் வாலி என்று தெரிந்தவுடன், அவரது வீட்டுக்கே சென்று பாராட்டியுள்ளார் கண்ணதாசன். அது என்ன பாட்டு தெரியுமா?
Advertisment
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரரான வாலி,ஜெமினி சாவித்ரி நடிப்பில் வெளியான கற்பகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்றார். இந்த படததிற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில், அடுத்தடுத்து எம்.ஜி.ஆர் மற்றம் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுத தொடங்கியள்ளார்.
வாலியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். கற்பகம் படத்தில் அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த எம்.எஸ்.வி, அதன்பிறகு பல படங்களில் தனது இசையில அவரை பாடல் எழுத வைத்துள்ளார். அந்த வகையில் உருவான ஒரு படம் தான் இரு மலர்கள். ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்திற்கு ஆரூர் தாஸ் வசனம் எழுதியுள்ளார்ம். எம்.எஸ்.வி இசையமைக்க அனைத்து பாடல்களையும் வாலி எழுதியுள்ளார்.
இந்த படத்தில் இடம் பெற்ற ‘’மாதவி பொன் மயிலால்’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. இந்த பாடல் பதிவு முடிந்து படம் வெளியானபோது கவியரசர் கண்ணதாசன் இந்த பாடலை வாணொலியில் கேட்டுள்ளார். அப்போது இந்த பாடல் தான் எழுதியது என்று நினைத்துக்கொண்ட கண்ணதாசன், இது பற்றி எம்.எஸ்.வியிம் பேச, அவர் இந்த பாடல் வாலி எழுதியது என்று உண்மையை உடைக்கிறார்.
Advertisment
Advertisements
இதை கேட்டு ஆச்சரியமடைந்த கண்ணதாசன், நான் எழுதியது போலவே இருக்கிறதே, நான் உடனே வாலியை பார்க்க வேண்டும் ன்ற சொல்ல, எம்.எஸ்.வியிடம் அவரது வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டு நேரடியாக வாலி வீட்டுக்கு சென்றுள்ளார். கண்ணதாசனின் வரவை எதிர்பார்க்காத வாலி, இன்ப அதிர்ச்சியடைந்த நிலையில், இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. நான் எழுதியது என்ற நினைத்தேன். இபபோ தான் தெரிந்தது நீ எழுதியது என்று. நான் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது மனதார பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் கண்ணதாசன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“