Advertisment

வாய்ப்பை மறுத்த ஏ.வி.எம். நிறுவனர் : சபதம் எடுத்த கண்ணதாசன் ; நிறைவேற்றியது எப்போது?

வாய்ப்பு கொடுக்க மறுத்ததால் சபதம் எடுத்த கண்ணதாசன் 22 ஆண்டுகள் கழித்து அந்த சபதத்தை நிறைவேற்றியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்

author-image
WebDesk
New Update
Kannadasan MSV Manithan

கவியரசர் கண்ணதாசன்

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட கவியரசர் கண்ணதாசன், நடிக்க வாய்ப்பு கேட்டு, ஒரு ஸ்டூடியோவுக்கு கடிதம் எழுதிய நிலையில், அங்கிருந்து வேலை இல்லை என்று பதில் வந்தது. அப்போது கண்ணதாசன் ஒரு சபதம் எடுத்து 22 ஆண்டுகள் கழித்து அதனை நிறைவேற்றியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில், கவிஞர், எழுத்தாளர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் கண்ணதாசன். கவியரசர் என்று அழைக்கப்படும் இவர், எழுத்தாளராக வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் பல தொழில்களை செய்து தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். முதலில் முடி திருத்தும் கடைசியில் வேலை செய்து அவர் சில மாதங்களில் அந்த வேலையில் இருந்து விலகியுள்ளார்.

அதன்பிறகு பட்டாளத்திற்கு துணிகளை தைத்து கொடுக்கும் தனது நண்பரின் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு தினமும் காய்கறிகள் வாங்க்கொண்டு வந்து கொடுக்கும் வேலை கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அவருக்கு சிறிதளவு பணமும் கிடைத்து்ளளது. இந்த பணத்தை வைத்து சினிமா பார்க்க தொடங்கிய கண்ணதாசன், எழுத்தாளர் மட்டுமல்லாமல் தான் ஒரு நடிகரான ஆக வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

நடிகரான ஆக வேண்டும் என்றால் இப்போது இருக்கும் முத்தையா (கண்ணதாசனின் இயற்பெயர்) என்ற பெயர் பொருத்தமாக இருக்காது என்று நினைத்து தனக்கு சந்திரமோகன் என்ற பெயரை வைத்துக்கொண்டார். அதன்பிறகு நடிக்க வாய்ப்பு தேடி, அப்போர் மந்தைவெளியில் செயல்பட்டு வந்த பிரகதி ஸ்டூடியோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏ.வி.எம். நிறுவனர் மெய்யப்ப செட்டியார் தனது நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய ஸ்டூடியோதான் பிரகதி ஸ்டூடியோ.

கண்ணதாசன் கடிதத்தை பார்த்த அவர்கள் இங்கு வேலை எதுவும் காலி இல்லை என்று பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே எழுத்தாளர் ஆக வேண்டும் என்று முடிவு செய்த கண்ணதாசன், அன்று முதல் ஒரு நடிகராக மாற வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளார். அதன்பிறகு எழுத்தாளராக மாறிய கண்ணதாசன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கவிஞராக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் இறுதிக்காட்சியில் நீதிபதியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கண்ணதாசன், கருப்பு பணம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் சில படங்களில் நடித்திருந்த கண்ணதாசன் தான் நடிகராக மாற வேண்டும் என்ற சபதத்தை நிறைவேற்ற 22 வருடங்கள் எடுத்துக்கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kannadasan Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment