Advertisment

கண்டபடி திட்டிய பாலச்சந்தர்: கமல்ஹாசனை அழ வைத்த கண்ணதாசன்; ரஜினியின் முதல் பட சம்பவம்!

கே.பாலச்சந்தர் கண்டபடி திட்டியதை கேட்ட கண்ணதாசன், பாடல் எழுதி வைத்துவிட்டு சொல்லாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kannadasan 1Kamal Haasan

கமல்ஹாசன் - கண்ணதாசன்

மனித உணர்ச்சிகள் அனைத்திற்கு தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்தவர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தொடங்கி, ரஜினிகாந்த் கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த கண்ணதாசன், இசையமைப்பாளர் எம்.எஸ்.வியுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

Advertisment

அந்த வகையில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ஒரு படத்திற்கு பாடல் எழுத வந்த கவியரசர் கண்ணதாசன், பாடல் எழுதாமல் தூங்கியதால், கே.பாலச்சந்தர் கண்டபடி திட்ட இதை கேட்டுக்கொண்டிருந்த கண்ணதாசன், பாடலை எழுதி வைத்துவிட்டு சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இது என்ன பாடல், எந்த படம் என்றால் அதுதான் அபூர்வ ராங்கள் படத்தில் இடம்பெற்ற ‘’ஏழு ஸ்வரங்கள்’’ என்ற பாடல். 

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் அபூர்வ ராகங்கள். கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்து முதல் படம் இதுதான் என்றாலும் ரஜினிகாந்த் இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாபர். ஸ்ரீவித்யா முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.வி இசையமைக்க, கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

படத்திற்கு பாடல் எழுதுவதற்காக வந்த கண்ணதாசன், படப்பிடிப்பு நடைபெறும் வீட்டின் மாடியில் படுத்து தூங்கியுள்ளார். இது தெரியாத பாலச்சந்தர், இசையமைப்பாளர் எம்.எஸ்.வியிடம், சென்று பாடல் பதிவு செய்யலாமா என்று கேட்க, அவரோ நாளைக்கு வைத்துக்’கொள்ளலாமே என்று கூறியுள்ளார். இதை கேட்ட பாலச்சந்தர், ஏன் என்னாச்சு என்று கேட்க, அவர் கண்ணதாசன் பற்றி கூறியுள்ளார். இதனால் கடுப்பான பாலச்சந்தர் கவிஞர் என்றால் எதுவேண்டுமானாலும் செய்யலாமா என்று கேட்டு கண்டபடி பேசியுள்ளார்.

ஒரு கட்டத்தில் கடுப்பான அவர், கமல்ஹாசனை சென்று பார்த்துவர சொல்ல, கமல்ஹாசன் பார்த்துவிட்டு அவர் தூங்கிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இவருக்கான நான் ஷூட்டிங் நடத்தாமல் இருக்கிறேன் இவருக்கு என்ன தூக்கம் என்று கேட்டுவிடடு ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து எதையாவது எழுதி கொடுக்க சொல்லுயா என்று சொல்ல, கமல்ஹாசன் மேலே சென்று பார்த்தால் கண்ணதாசன் அங்கு இல்லை. அவர் எழுதி வைத்துவிட்டு அப்போதே புறப்பட்டு சென்றுவிட்டார் என்று கண்ணதாசனின் உதவியாளர் கூறியுள்ளார்.

அரை தாக்கத்தில் இருந்த கண்ணதாசன் பாலச்சந்தர் பேசியதை கேட்டுவிட்டு, பாடலை எழுதிவிட்டு சொல்லாமல் சென்றுள்ளார். குடித்துவிட்டு தூக்கத்தில் எழுதியது எப்படி இருக்க போகிறது என்று அலச்சியமாக பார்த்த கமல்ஹாசன் பாடலை பாடித்துவிட்டு கண் கலங்கியுள்ளார். ஒரே கவிதையாக எழுதி வைத்திருந்த கண்ணதாசனின் வரிகளில் எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியவில்லை. அதில் அவர் எழுதிய பாடல் தான் ‘’ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற பாடல். இந்த தகவலை கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamalhaasan Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment