/indian-express-tamil/media/media_files/2024/11/07/xIFE3OJq2Aar12x6h11G.jpg)
தமிழ் சினிமாவில் பாடல் மற்றும் இசையில் உச்சம் தொட்ட இருவர் என்றால், அது கண்ணதாசனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் தான். இவர்கள் இருவரும் 6 நாட்களில் 6 பாடல்கள் எழுத முடிவு செய்து கடைசி நாளில் செய்த கூத்துக்கள் குறித்து பட்டிமன்ற பேச்சாளர் வாசுகி மனோகரன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை எம்.எஸ்.வி கவியரசர் கண்ணதாசன் இருவரும் இணைந்துவிட்டால் அந்த படம் பெரிய வெற்றியை பெற்றுவிடும், குறிப்பாக பாடல்கள் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதே சமயம், கவியரசர் கண்ணதாசன், பாடல் கம்போசிங் என்றால் லேட்டாகத்தான் வருவார் என்பது குறித்தும், இன்றைய பிரபலங்கள் பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில் பட்டிமன்ற பேச்சாளர் ஒரு சம்பவத்தை கூறியுள்ளார்.
இது குறித்து வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், ஸ்ரீதர் நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற ஒரு படம் எடுத்தார். இந்த படத்தை 23 நாட்களில் எடுத்து ரிலீஸ் செய்த இவர், அந்த காலத்திலேயே பெரிய ரெக்கார்டு பிரேக் செய்தார். படம் தொடங்குவதற்கு முன்பு, கண்ணதாசன், எம்.எஸ்.வி இருவரையும் அழைத்து, வழக்கம்போல் தாதமாக்கிவிட கூடாது. இந்த படத்தை 23 நாட்களில் எடுக்க திட்டமிட்டுள்ளேன். உங்களுக்கு 6 நாட்கள் அவகாசம் தருகிறேன். 5 பாடல்கள் மட்டும் எழுதி கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை ஏற்றுக்கொண்ட கண்ணதாசன் எம்.எஸ்.வி இருவரும் புதிய சிந்தனைக்காக, பெங்களூரு உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். எம்.எஸ்.வி ஹார்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, அண்ணே பாட்டு என்று கேட்க, இப்போ தானே வந்துருக்கோம், டயார்டா இருக்குடா, குளித்துவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். குளித்துவிட்டு வந்தவுடன், பாடல் கேட்க சாப்பிட்டுவிட்டு வருகிறேன், என்று கண்ணதாசன், சொல்ல, சாப்பிட்டு வந்தவுடன் எம்.எஸ்.வி பாட்டு கேட்டுள்ளார்.
சாப்பிட்டவுடன் பாட்டா கொஞ்சம் தூங்கிவிட்டு வருகிறேன் என்று கண்ணதாசன் கூறியுள்ளார். இப்படியே 4 நாட்கள் கடந்துவிட, 5வது நாள், சென்னையில் இருந்து ஸ்ரீதர் போன் செய்து, பாட்டு ரெடியா என்று கேட்க, இன்னும் ஒரு பாடல் தான் பாக்கி என்று எம்.எஸ்.வி பொய் சொல்லிவிட்டு, கண்ணதாசனை பார்த்துள்ளார். அதன்பிறகு அவரிடம், இனிமேல் உங்கள் பாட்டுக்கு நான் இசையமைக்க மாட்டேன் இது சத்தியம், சத்தியம், சத்தியம் என்று சொல்ல, விசு சொன்னது நீ தானா சொல் சொல் என் உயிரே என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.எஸ்.வி, அண்ணே, என்று சொல்ல, இதுதான் பாட்டு எழுதிக்கோ என்று கூறியுள்ளார். அப்படி எழுதிய அந்த பாட்டு தான், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம் பெற்ற சொன்னது நீதானா என்ற பாடல். இன்றுவரை அந்த பாட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த தகவலை வாசுகி மனோகரன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.