/indian-express-tamil/media/media_files/zPVHigKkgvnLK2NudwwC.jpg)
ஒருநாள் கல்லூரி ஹாஸ்டலில் தங்கியிருந்த கவியரசர் கண்ணதாசன், இட்லியை வைத்து ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் கவிஞர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கவியரசர் கண்ணதாசன், தன் வாழ்நாளில் தான் சந்தித்த அனுபவங்களை வைத்து பல பாடல்களை எழுதியுள்ளார். கண்ணதாசனின் கை வண்ணத்தில் வந்த பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல், வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் கண்ணதாசன் தனது வரிகள் மூலம் ஆறுதல் கூறியுள்ளார்.
அதேபோல் ஒரு கவிஞர் – இசையமைப்பாளர் இடையே நெருக்கம் இருந்தது என்று எடுத்துக்கொண்டால் அதில் முன்னணியில் இருப்பர் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதனும் தான். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்துள்ளனர். மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் கண்ணதாசன் பல பாடல்களை எழுதியிருந்தாலும், எம்.எஸ்.வியுடன் இவர் எழுதிய அனைத்து பாடல்களுமே தனி ரகம் என்று சொல்லலாம்.
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாமல், கவிதைகள் எழுதுவதிலும் வல்லவதாக இருந்த கண்ணதாசனை, ஒருநாள், பச்சையப்பன் கல்லூரியில் எங்களுடன் தங்க வேண்டும் என்று மாணவர்கள் விருப்பப்பட்டு அழைத்துள்ளனர். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கண்ணதாசன் ஒருநாள் அவர்களுடன் தங்க சென்றபோது அவர்கள் கல்லூரியின் ஹாஸ்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். ஹாஸ்டலில் மெஸ்ஸில் கண்ணதாசனை சாப்பிட அழைத்துள்ளனர்.
கண்ணதாசன் சாப்பிட அமர்ந்ததும் அங்கு அவருக்காக இட்லி பரிமாறப்பட்டது. அப்போது இட்லி மிகவும் சின்னதாக இருந்ததால், அதை பார்த்த ஒரு மாணவர், அண்ணே இந்த இட்லியை வைத்து ஒரு பாட்டு சொல்லுங்க என்று கேட்டுள்ளார். அப்போது அவரை பார்த்த கண்ணதாசன் ‘’இட்லியே ஏன் இளைத்து போனாய், நீ எந்த பையன் மீது காதல் ஆனாய் என்று பாடல் பாடியுள்ளார். இந்த பாடலை மறக்கவே முடியாது என்று ஒரு மாணவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.