கண்ணதாசன் பாட்டு எழுதிய அதே மெட்டு; வாலி வரிகளில் செம்ம ஹிட்டு!

கண்ணதாசன் பாடல் எழுதிய ஒரு டியூனுக்கு வாலியும் பாடல் எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்

கண்ணதாசன் பாடல் எழுதிய ஒரு டியூனுக்கு வாலியும் பாடல் எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்

author-image
WebDesk
New Update
Vaali Kannadasan song

கண்ணதாசன் - வாலி

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் பல்லவி நீளமாக இருந்ததால் படத்தில் வைக்கப்படாத நிலையில், அதே டியூனுக்கு கவிஞர் வாலி தனது ஸ்டைலில் பாடல்கள் எழுதி ஹிட் அடித்துள்ளார்.

Advertisment

1964-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பச்சை விளக்கு. சிவாஜி எஸ்.எஸ்.ராஜேந்திரன், நாகேஷ் கவுக்கார் ஜானகி, விஜயகுமாரி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தை அரங்கனால் என்பவர் தயாரித்திருந்தாலும், ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தயாரிப்பு மேற்பார்வையாளராக இருந்துள்ளார்

இந்த படத்திற்கான பாடல் பாடல் கம்போசிங்கின்போது, எம்.எஸ்.வி ஒரு டியூன்போட அதை கேட்ட கண்ணதாசன், ரொம்ப மென்மையாக சூப்பரா இருக்கு என்று சொல்லிவிட்டு பாடல் எழுதியுள்ளார். பொன் மலர்செண்டு முகமாக, இரு வண்டு விழியாக, என்று எழுதிய இந்த பாடல் அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் பாடலை கேட்ட, ஏ.வி.மெய்யப்ப செட்டியார், பல்லவி நீளமாக இருக்கிறது. ரசிகர்களை கவராது என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட கண்ணதாசன், டியூனுக்கு தான் பாடல் எழுதியிருக்கிறேன் என்று சொல்ல, நான் டியூன் பாடல் இரண்டையுமே குறை சொல்லவில்லை. ஆனால் பல்லவி நீளமாக இருக்கிறது என்று கூறி வேண்டாம் என கூறியுள்ளார். அதன்பிறகு அடுத்த பாடலுக்கான டியூன் போட்டு பாடல் எழுதி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்ட படத்தில் வைக்கப்பட்டள்ளது. ஆனால் கண்ணதாசனுக்கு பொன் மலர் செண்டு பாடல் மறக்க முடியாமல் இருந்துள்ளார்.

Advertisment
Advertisements

இதன்பிறகு சில நாட்கள் கழித்து வேறு படத்திற்கு கம்போசிங் போகும்போது, எம்.எஸ்.வியிடம் புதிதாக டியூன் போடாதே, ஏற்கனவே போட்ட அந்த பொன்மலர் செண்டு டியூன் போடு என்று சொல்ல, எம்.எஸ்.வி தயங்கியபடி, இல்லனே முக்தா சீனிவாசன் தயாரிக்கும் பூஜைக்கு வந்த மலர் படத்திற்காக அந்த டியூனை கொடுத்துவிட்டோம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் பாடல் எழுதியாச்சா என்று கேட்க, எழுதியாச்சு வாலிதான் எழுதியிருக்கார் என்று எம்.எஸ்.வி கூறியுள்ளார்.

‘’மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட’’ என்ற இந்த பாடலை கேட்ட கண்ணதாசன் ரொம்ப அருமையாக எழுதியிருக்கிறான் என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு போய் கவிஞர் வாலிக்கு போன் செய்து ரொம்ப அருமையாக எழுதியிருக்கிறாய் என்று பாராட்டியுள்ளார். அதன்பிறகு பொன்மலர் செண்டு என்பதை மறந்த கண்ணதாசன் மையேந்தும் விழியாட என பாட தொடங்கியதாக அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: