Advertisment

நடிக்க மறுத்து விலகிய எம்.ஜி.ஆர்: ஜெமினி கணேசன் நடித்து சூப்பர் ஹிட்டான படம்; வாலிக்கு கிடைத்த வாழ்க்கை!

எம்.ஜி.ஆர் நடிப்பதாக சொல்லி, கடைசி நேரத்தில் விலகிய ஒரு படம் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
MGR Gemini

கவிஞர் வாலிக்கு பெரிய திருப்புமுனை தந்த படமாக கற்பகம் படத்தில் ஜெமினி கணேசன் – சாவித்தி இணைந்து நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் முதலில் எம்.ஜி.ஆர் தான் நடிக்க இருந்தார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

தமிழ் சினிமாவின் இயக்குனர் திலகம் என்று அழைக்கப்பட்டவர்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். 1962-ம் ஆண்டு வெளியான சாரதா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்து தெய்வத்தின் தெய்வம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து 3-வது படமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் தான் கற்பகம்.

ஜெமினி கணேசன் – சாவித்ரி இணைந்து நடித்த இந்த படத்தில் எஸ்.வி.ரங்காராவ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கே.ஆர்.விஜயா, முத்துராமன், வி.கே.ராமசாமி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு, விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்திருந்த நிலையில், கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுத, பி.சுசீலா அணைத்து பாடல்களையும் பாடியிருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று, வாலிக்கு பெரிய புகழை சேர்த்தது.

இந்த படத்தை இயக்க முடிவு செய்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முதலில் இந்த கதையை எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார். அவரும் கதை பிடித்து போக, நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம், இந்த படத்தின் முக்கிய கேரக்டராக இருக்கும் மாமனார் கேரக்டரில் பாலையா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். இதை கேட்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முடியாது இந்த கேரக்டரில், எஸ்.வி.ரங்காரவ் தான் நடிப்பார். அவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் பேச்சை கேட்காத எம்.ஜி.ஆர், பாலையா தான் நடிக்க வேண்டும் என்று சொல்ல, அந்த நேரத்தில், கற்பகம் படத்தை தயாரிக்க இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பண நெருக்கடி ஏற்பட்டதால், படத்தை தயாரிக்க முடியாத நிலை எழுந்துள்ளது. இதனால் இந்த படம் கைவிடப்பட்ட நிலையில், ஒரு சில மாதங்கள் கழித்து இந்த படத்தை மீண்டும் தொடங்கிய இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், படத்தின் தயாரிப்பாளராகவும் செயல்பட்டார். எம்.ஜி.ஆருக்கு பதிலாக ஜெமினி கணேசன் – சாவித்ரி நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதேபோல் படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், வாலி என்ற கவிஞர் தமிழ் சினிமாவில் பிரபலமாவதற்கு முக்கிய படமாகவும் அமைந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Mgr
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment