20 வயதில் இத்தனை அழகா? வாலி பாடலில் எழுந்த சர்ச்சை; அவரே கொடுத்த விளக்கம்!

வாலி எழுதிய பாடல், பெண் குறித்து சர்ச்சையாக இருக்கும் என்று ஏ.வி.எம்.நிறுவனம் கூறியிருந்தாலும் அதற்கு வாலி தனது தரப்பு விளக்கத்த கொடுத்து பாடலை பதிவு செய்துள்ளார்.

வாலி எழுதிய பாடல், பெண் குறித்து சர்ச்சையாக இருக்கும் என்று ஏ.வி.எம்.நிறுவனம் கூறியிருந்தாலும் அதற்கு வாலி தனது தரப்பு விளக்கத்த கொடுத்து பாடலை பதிவு செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Kavignar vaali3

ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த ஒரு படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதிய கவிஞர் வாலி, ஒரு பாடலில், 20 வயது பெண்ணை புகழ்வது போல் எழுதியிருப்பார். இந்த பாடலை கேட்ட ஏ.வி.எம்.நிறுவனம் சர்ச்சையாகிவிட போகிறது என வாலியிடம் சொல்ல, கண்டிப்பாக ஆகாது அதற்கு நான் உத்தரவாதம், அப்படி எதாவது நடந்தால் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அது என்ன படம்? என்ன பாட்டு?

Advertisment

1967-ம் ஆண்டு ஏ.வி.எம்.நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் அதே கண்கள். ஹாலிவுட் தரத்தில் வெளியான இந்த படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் வேதா தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில், படத்திற்கான அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

குறிப்பாக இந்த படத்தில் வரும் ஓ ஓ எத்தனை அழகு 20 வயதினிலே என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அநத காலக்கட்டத்தில் ரொம்பவும் மாடர்னாக அமைந்த இந்த படத்தில் டியூன்களுக்கு வாலி அற்புதமாக வரிகளை அமைந்திருந்தார். அந்த வகையில் வந்த டியூனுக்கு வாலி எழுதிய வரிகள், ஏ.வி.எம்.நிறுவனத்திற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாடல் கம்போசிங்கின்போது, அருகில் இருந்த ஏ.வி.எம்.குமரன், வாலியின் இந்த வரிகளை பார்த்து, என்ன சார் 20 வயதினிலே என்று எழுதி இருக்கிறீர்கள். 16 வயதினிலே என்றால் பொருத்தமாக இருக்கும். 20 வயதினிலே என்றால், சர்ச்சையாகிவிடப போகிறது என்று கூறியுள்ளார். இதை கேட்ட வாலி, ஒரு பெண் 16 வயதில், பெரிய பெண்ணாக மாறினாலும், அவள் குழந்தை போலத்தான் இருப்பாள்.

Advertisment
Advertisements

20 வயதிற்கு பிறகுதான் ஒரு பெண்ணுக்கு உன்டான தோற்றம் அவளிடம் இருக்கும். அதனால் 20 வயதில் எத்தனை அழகு என்பது தான் சரியாக இருக்கும். இதற்கு யாராவது மறுப்பு சொன்னால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதன்பிறகு இந்த பாடலின் வரிகளை மாற்றிக்கொள்ளுங்கள். இந்த பாடலில் எப்படியும் 25 வயதில் உள்ள ஒரு பெண்ணை தான் நடிக்க வைக்க போகிறீர்கள். அதில் எப்படி 16 வயதினிலே என்று சொல்ல முடியும். நான் எழுதியது தான் சரி என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு இந்த பாடல் பதிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா இணைந்து பாடிய இந்த பாடல், மைசூரில் படமாக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

kavignar vaali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: