தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர்களாக வலம் வந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இசையமைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், ஒரு கட்டத்தில் இருவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த பிரிவுக்கு முக்கிய காரணம், ராமமூர்த்தி செய்த ஒரு செயல்தான் என்று எம்.எஸ்.வி மகள் லதா மோகன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது மெல்லிசையினால் பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம.ஜி.ஆர் தொடங்கி சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு தனது இசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த எம்.எஸ்.வி தொடக்கத்தின் டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்து வந்தார்.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவருமே சி.ஆர்.சுப்புராமன் என்ற இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் சி.ஆர்,சுப்புராமன் திடீரென இறந்துவிடுவதால், அவர் இசையமைப்பதாக ஒப்புக்கொண்ட படங்கள் பாதியில் நிற்கிறது. இந்த படங்களுக்கு நாங்கள் இசைமைக்கிறோம். எங்கள் குரு படங்களை நாங்கள் முடிக்கிறோம் என்று கூறி விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவரும் இசையமைத்து வெற்றிகளை குவிக்கின்றனர்.
குருவின் படங்களை முடித்துவிட்டாலும், இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்த போது, 1964-ம் ஆண்டு வெளியாக காமெடி படமான காதலிக்க நேரமில்லை படத்தை முடித்த ஸ்ரீதர் அடுத்து என்ன படம் எடுக்கலாம் என்று யோசனையில் இரக்க கலை கோயில் என்ற படம் எடுக்க முடிவாகிறது. இந்த படத்தின் கதையை கேட்ட எம்.எஸ்.வி மிகவும் பிடித்துபோய் நானே தயாரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பட தயாரிப்பில் ஆர்வம் இல்லாத டி.கே.ராமமூர்த்தி, இதற்கு ஒப்புக்கொள்ளா விட்டாலும், எம்.எஸ்.வி அந்த முடிவில் உறுதியாக இருந்துள்ளார். அதன்பிறகு வெளியான கலை கோயில் படம் தோல்வியாக அமைய, எம்.எஸ்.வி கடனில் சிக்கியுள்ளார். இதனால் அவரை விட்டு பிரிய நினைத்த ராமமூர்த்தி அதற்காக முயற்சியில் ஈடுபட்டிருந்துள்ளார். இப்படி ஒருநாள் எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ராமமூர்த்தி திடீரென எம்.எஸ்.வி சட்டையை பிடித்துள்ளார்.
அவரின் இந்த செயல் யூனிட்டில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து யாரோ எம்.எஸ்.வி அம்மாவிடம் சொல்ல, அவரோ, நான் வைத்திருப்பது நீ ஒருவன் மட்டும் தான். எனக்கு வேறு பிள்ளைகள் இல்லை. இனிமேல் ராமமூர்த்தியுடன் சேர வேண்டாம். உன்னை எதாவது செய்துவிட்டால் என்னால் தாங்க முடியாது. இனி நீ கஷ்டப்பட்டாலும் தனியாக கஷ்டப்படு என்று கூறியுள்ளார். அதன்பிறகு தான் எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இருவரும் பிரிந்ததாக எம்.எஸ்.வி மனைவி கூறியதாக அவரது மகள் லதா மோகன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“