Advertisment

எம்.ஜி.ஆர் நடித்த 2 படங்கள் : படப்பிடிப்பை நிறுத்திய கண்ணதாசன் சகோதரர் ; என்ன நடந்தது?

கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசன், எம்.ஜி.ஆர் நடிப்பில் 2 படங்களை தயாரிக்க முயற்சி செய்து இறுதிக்கட்டத்தில் அந்த படங்களின் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MGR Chandra

எம்.ஜி.ஆர்

க்ளாசிக் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளராக இருந்த ஏ.எல்.சீனிவாசன் எம்.ஜி.ஆர் நடிப்பில் 2 படங்களை தயாரிக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு இறுதியில் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். அந்த படங்களும் நின்றுபோனது.

Advertisment

நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன்பின் ஹீரோவாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் எம்.ஜி.ஆர், துணை நடிகராக அறிமுகமானி 10 வருடங்கள் கழித்தே இவர் ஹீரோவாக நடித்தார். அதற்கு முன்பு எம்.ஜி.ஆா நடிப்பில் பல திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு, சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசன், எம்.ஜி.ஆர் நடிப்பில் 2 படங்களை தயாரிக்க முயற்சி செய்து இறுதிக்கட்டத்தில் அந்த படங்களின் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார். முதலில் எம்.ஜி.ஆர் பத்மினி நடிப்பில் ரத்னாவதி என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். இந்த படத்திற்காக, எம்.ஜி.ஆர் பத்மினி நடிப்பில் ஒரு பாடல் காட்சியையும் இயக்குனர் பா.நீலகண்டன் இயக்கியிருந்தார்.

இப்படி வளந்த இந்த படம் திடீரென ஒருநாள் படப்பிடிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசீர்வாத் என்ற பெயரில் இந்தியில் வெளியான படத்தை தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் ரீமேக் செய்ய முடிவு செய்த ஏ.எல்.சீனிவாசன், படத்திற்கு இயக்குனராக பீம்சிங்கை தேர்வு செய்துள்ளார். ஒருநாள் எம்.ஜி.ஆருக்கு அவரது தோட்டத்தில் பீம்சிங் கதை கூறியுள்ளார்.

இந்த கதையை கேட்ட எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து போக, அடுத்தக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுள்ளது. ஆனால் படப்பிடிப்பு தொடங்க 10 நாட்கள் இருக்கும்போது திடீரென ஏ.எல்.சீனிவாசன் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர் – பீம்சிங் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் படம் நின்றுபோனதாக அறிவிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்ற இருந்த நினைத்த ஏ.எல்.சீனிவாசனின் தயாரிப்பு நிர்வாகி ஏ.எல்.எஸ்.வீரய்யா, ஏமாற்றம் அடைந்த நிலையில், சில நாட்கள் கழித்து ஏன் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தினீர்கள் என்று கேட்டபோது, அந்த படம் நின்றுவிட்டது அவ்வளவுதான். காரணம் கேட்காதே என்று கூறியுள்ளார் ஏ.எல்.சீனிவாசன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kannadasan Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment