Advertisment
Presenting Partner
Desktop GIF

செயற்கையா நடிக்காதீங்க... இதுதான் இயற்கை : எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த இயக்குனர்

பல தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் முன்னணி நடிகராகவும், இயக்குனர் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
MGR

நடிகர் எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவை தனது உள்ளங்கையில் வைத்திருந்தவர் என்றாலும் கூட அவருக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்த இயக்குனரும் இருக்கிறார்.

Advertisment

க்ளாசிக் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து பல்வேறு தடைகளை தாண்டி சினிமாவிற்கு வந்த இவர், இங்கேயும் பல்வேறு சிக்கல்களுக்கு இடையே 10 வருடங்கள் காத்திருந்து நாயகனாக மாறியவர். இவர் நாயகனாக மாறினாலும், நடிகைகள் பலரும் இவருடன் இணைந்து நடிக்க மறுத்த சம்பவம் எல்லாம் சினிமாவில் நடந்துள்ளது.

இந்த தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் முன்னணி நடிகராகவும், இயக்குனர் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவருடன் நடிக்க நடிகைகள் தயங்கிய காலம்போய் அவருடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று நடிகைகள் பலரும் நினைத்துக்கொண்டிருந்த காலத்தை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் முன்னணியில் இருக்கும்போதே தனது கொடை வள்ளல் மனதை வெளிக்காட்டியவர்.

அதேபோல் மாஸ் ஹீரோவாக இருந்த எம்.ஜி.ஆர் நாடத்தில் இருந்து வந்தால் முதல் படத்தில் நடிக்கும்போதே அவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று அவரின் முதல் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடகத்தில் இருந்து சினிமா நோக்கி வந்த எம்.ஜி.ஆருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர் அமெரிக்க இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன்.

எம்.கே.ராதா எம்.ஆர்.ஞானாம்பாள் இணைந்து நடித்த இந்த படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், எம்.ஜி.ஆர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கி பெரிய நாயகனாக உயர்ந்தார். அதே சமயம் சதிலீலாவதி படத்தின் இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன், 1950-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான மந்திரகுமாரி என்ற படத்திற்கு பின் அமெரிக்காவிற்கு திரும்பிவிட்டார்.

அதன்பிறகு மீண்டும் 1994-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவரிடம், அப்போது ஆனந்த விகடன் பத்திரிக்கையின் நிரூபர் எம்.ஜி.ஆரை இயக்கிய தொடர்பான அனுபவங்கள் குறித்து கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த எல்லீஸ் ஆர் டங்கன், ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு சினிமாவின் நுனுக்கங்கள் தெரியவில்லை. நாடகத்தில் இருந்து வந்ததால் எல்லா வசனங்களையும் உரக்க பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.  அதனால் அவரது நடிப்பும் இயற்கையாக இல்லாமல் செயற்கையாக இருந்தது.

சினிமாவிற்கு இவ்வளவு மிகை நடிப்பு தேவையில்லை. இயற்கையாக நடியுங்கள் அதுதான் சிறந்த நடிப்பு என்று நான் எம்..ஜி.ஆரிடம் சொன்னேன் என்று கூறியுள்ளார். மேலும் எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ப்ரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சந்திக்க எல்லீஸ் ஆர் டங்கன் முயற்சித்ததாகவும், ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஒரு பத்திரிக்கை பேட்டியில் தெரிவித்ததாக இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr Tamil Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment