Advertisment

தற்பெருமை பேசிய இயக்குனர்... காரை அடித்து நொறுக்கிய எம்.ஜி.ஆர் ரசிகர்கள் : காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். இவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் ஒரு படம் கூட இயக்கவில்லை

author-image
WebDesk
New Update
KSG And MGR

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் - எம்.ஜி.ஆர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தனது படத்தின் வெற்றி விழாவுக்காக மதுரை சென்றிருந்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் புது காரை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இத்தனைக்கும் அவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் ஒரு படம் கூட இயக்காத இயக்குனர் என்றால் நம்ப முடிகிறதா?

Advertisment

தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். 1962-ம் ஆண்டு வெளியான சாரதா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், 1968-ம் ஆண்டு ஜெமினிகணேசன் நடிப்பில் பணமா? பாசமா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தின் வெற்றி விழாவுக்காக தனது புது காரில் மதுரை சென்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விழாவில் பேசும்போது எந்த வசூல் சக்ரவர்த்தியாக இருந்தாலும், என் படத்திற்கு முன்பு அவர்கள் படம் வசூல் செய்யாது. என் படத்திற்கு நிகர் என் படம் தான் என்று தற்பெருமையாக பேசியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் வசூல் சக்ரவர்த்தியாக இருந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் இந்த பேச்சை பொறுத்துக்கொள்ள முடியாமல், கே.எஸ்.கோபாலகிருஷ்ணின் புது காரை அடித்து நொறுக்கியுள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தனது காரின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், ரசிகர்கள் அடுத்து என்ன செய்வார்களே என்ற பயத்தில், உடனடியாக சென்னை கிளம்பி வந்துள்ளார். அதன்பிறகு, அப்போது முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாவை சந்தித்து நடந்த விஷயங்களை கூறி, நான் எதார்த்தமாகத்தான் பேசினேன். ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள். எம்.ஜி.ஆரை குறி வைத்து பேசவில்லை என்று அவரிடம் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பேச்சை கேட்டு, அறிஞர் அண்ணா அமைதியாக இருந்த நிலையில், தான் ஒரு காங்கிரஸ் கட்சிக்காரன் என்பதால், அண்ணா அவரது கட்சிக்காரரான எம்.ஜி.ஆருக்கு சப்போர்ட் செய்கிறார் என நினைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். அடுத்து சில தினங்களுக்கு பின், குற்றாலம் சென்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தன்னை 2 பேர் பின் தொடர்ந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவர்கள் மதுரையில் பிரச்சனை செய்தவர்கள் தான் என்று நினைத்த அவர், குளியலை பாதியுடன் நிறுத்திவிட்டு அங்கிருந்து கிளம்ப முயற்சித்துள்ளார். அப்போது அவரின் கார் டிரைவர், ஏன் இங்கு வந்து பிரச்சனை செய்ய பார்க்கிறர்கள் என்று கேட்டபோது, நாங்கள் ரகசிய போலீஸ் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களை தாக்க வாய்ப்புள்ளது என்பதால் முதல்வர் அண்ணாதான் எங்களை பாதுகாப்புக்கு அனுப்பினார் என்று கூறியுள்ளனர்.

இதை கேட்டு மனம் நெகிழ்ந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், உடனடியாக அண்ணாவை சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார். அவரும் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, நீங்கள் எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்க உள்ளதாக ஒரு அறிக்கை விடுங்கள் என்று சொல்ல, முதலில் தயங்கிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், அதன்பிறகு அண்ணாவின் சொல்படி, அறிக்கை விட்டுள்ளார். இதை பார்த்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் கோபத்தை கைவிட்டுள்ளனர்.

அடுத்த சில தினங்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வெளிநாடு சென்றிருந்தபோது, அவரது மகன்களில் ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து அடிப்பட்ட செய்தி கேட்ட எம்.ஜி.ஆர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, அந்த பையனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யுங்கள். எவ்வளவு செலவானாலும் நான் தருகிறேன். என்று கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து சில தினங்களுக்கு பின் திரும்பிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இந்த செய்தியை கேட்டு, மனம் நெகிழ்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment