தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர் என்று பெயரேடுத்த எம்.எஸ்.விஸ்வநாதன், தான் பல படங்களில் பிஸியாக இசைமைக்கும்போது எம்.ஜி.ஆர் தனது படத்திற்கு இசைமைக்க சொல்ல, எம்.எஸ்.வி மறுத்துள்ளார். இதனால் கடுப்பான எம்.ஜி.ஆர் நள்ளிரவில் எம்.எஸ்.வி வீட்டுக்கு சென்று பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர், என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர், வாள் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகளிலும் முறையாக பயிற்சி பெற்றவதாக இருந்துள்ளார். நாடக நடிகராக இருந்து திரையுலகில் துணை நடிகராக அறிமுகமாகி பல போராட்டங்களுக்கு பிறகு, நாயகனாக உயர்ந்த இவர், ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். இவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான நாடோடி மன்னன் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்த எம்.ஜி.ஆர், 1970-களில் அதிமுக கட்சியை தொடங்கினார். அப்போது உலகம் முழுவதும் சிறந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதற்கு ஏற்றார்போல் ஒரு கதை தேவை என்று தேடிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் கதை கிடைத்துள்ளது, இந்த படத்தை படமாக்க, பல தடைகள் வந்துள்ளது. ஆனாலும் மனம் தளராத எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு நடத்த வெளிநாடுகளுக்கு செல்ல தயாரானார்.
மேலும் இந்த படத்திற்கு இசையமைக்க எம்.எஸ்.விஸ்வநாதனை கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். அப்போது பல படங்களை கைவசம் வைத்திருந்த எம்.எஸ்.வி, முடியாது என மறுத்துள்ளார். ஆனாலும் விடாத எம்.ஜி.ஆர், உனக்கு என்ன வேண்டுமோ செய்து தருகிறேன். சாப்பாடு எல்லாம் தோட்டத்தில் இருந்து வந்துவிடும். நீ இசையமைத்தால் மட்டும் போதும் என்று சொல்ல, கடைசி வரை எம்.எஸ்.வி மறுத்துள்ளார். நான் காலை மாலை என பிஸியாக பல படங்களில் இசையமைப்பதாக கூறியுள்ளார்.
எம்.எஸ்.வியின் இந்த வார்த்தையை கேட்ட எம்.ஜி.ஆர், கடுப்பில், வேறொரு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்துள்ளார், அந்த இசையமைப்பாளரின் இசையில் முதல் பாடல் தயாராகியுள்ளது. அந்த பாடலை நள்ளிரவில் எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென, தனது டிரைவரை அழைத்து வண்டியை எடு என்று சொல்ல, அவர் எங்கே போகனும் அய்யா என்று கேட்க விசு வீட்டுக்கு வண்டியை விடு என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர்.
நள்ளிரவில், எம்.ஜி.ஆர் எம்.எஸ்.வி வீட்டு கதவை தட்ட, எம்.எஸ்.வி கதவை திறந்துள்ளார்.
திடீரென எம்.ஜி.ஆரை பார்த்து எம்.எஸ்.வி ஷாக் ஆக, அவரோ தள்ளுடா என்று எம்.எஸ்.வியை தள்ளிவிட்டு நேராக அவரது அம்மாவிடம் சென்றுள்ளார். நான் என் படத்திற்கு இசையமைக்க சொல்கிறேன். ஆனால் அவன் வரமாட்டேன்குறான் மா. நீங்கதான் அவனிடம் சொல்ல வேண்டும் என்று எம்.எஸ்.வி அம்மாவிடம் எம்.ஜி.ஆர் சொல்ல, அவரோ, என்னடா ஒழுங்க நாளைக்கு ஸ்டூடியோவுக்கு போ என்று மகன் எம்.எஸ்.விக்கு கட்டளையிட, அவரும் சரி என்று கூறியுள்ளார். அதன்பிறகு தான் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு எம்.எஸ்.வி இசையைமத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“