Advertisment

கால்ஷீட் கொடுக்காத சிவாஜி: கடனாளியான இயக்குனருக்கு உதவிய எம்.ஜி.ஆர்; படம் வெற்றி பெற்றதா?

சிவாஜி கால்ஷீட் கொடுக்கதாததால் படம் பாதியில் நின்றதால் கடன் நெருக்கடிக்கு உள்ளான இயக்குனர் ஒருவருக்கு கால்ஷீட் கொடுத்து அவரது கடனை அடைக்க எம்.ஜி.ஆர் உதவியுள்ளார்.

author-image
WebDesk
New Update
MGR Meenava

எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று பெயரெடுத்தவர் ஸ்ரீதர். 1954-ம் ஆண்டு வெளியான ரத்தபாசம் என்ற படத்தின் மூலம் எழுத்தாளராக தமிழ் சினிமாவில் நுழைந்த ஸ்ரீதர், முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில பல படங்களை இயக்கினார். அதே சமயம் அப்போது முன்னணி நடிகர்களாக இரந்த எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகியோரை வைத்து குறைவான படங்களே இயக்கி இருந்தார்.

Advertisment

ஸ்ரீதர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை தயாரித்து இயக்கிய ஸ்ரீதர் அப்போதே ரவிச்சந்திரன் நாயகனாக நடிக்க காதலிக்க நேரமில்லை என்ற படத்தையும் இயக்கிய தாயாரித்துக்கொண்டிருந்தார். இந்த இரு படங்களின் விளம்பரங்கள் அன்று செய்தித்தாள்களில் வந்தது.

இந்த விளம்பரங்கள் வெளியான பிறகு எம்.ஜி.ஆரின் அன்று சிந்திய ரத்தம் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. அதன்பிறகு எம்.ஜி.ஆர், ஸ்ரீதர் கூட்டணி அமையவே இல்லை. ஆனாலும் மற்ற நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த ஸ்ரீதர், இந்தி மற்றும் தமிழில் பல படங்களை தயாரித்தும் வெளியிட்டுள்ளார். இந்த வகையில், 1972-ம் ஆண்டு ஹீரோ 72 என்ற பெயரில், தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படத்தை தயாரித்துள்ளார்.

இந்தியில் வெற்றி பெற்ற இந்த படம் தமிழில் சிவாஜி நடிப்பில் தயாரானது. ஆனால் சிவாஜி சரியாக கால்ஷீட் கொடுக்காததால் அந்த படம் கடைசிவரை வெளியாகவில்லை. இதனால் கடுமையாக கடன் நெருக்கடிக்கு உள்ளான ஸ்ரீதர் அடுதது என்ன செய்வது என்று யோசித்தபோது, நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆரிடம் கால்ஷீட் கேளுங்கள். நீங்கள் இப்போது இருக்கும் நிலைமையை சரி செய்ய அதுதான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் ஸ்ரீதர் அன்று சிந்திய ரத்தம் படத்தை பற்றி கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர், அதை மனதில் வைத்துக்கொள்ளமாட்டார். நீங்கள் கால்ஷீட் கேட்டால் கண்டிப்பாக கொடுப்பார் என்று சொல்ல, அதற்காக ஸ்ரீதர் முயற்சி செய்துள்ளார். இந்த முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்து தயாரான படம் தான் உரிமைக்குரல். இந்த படத்திற்காக சந்திப்பு நடத்த எம்.ஜி.ஆர் முதலில் நம்பியார் வீட்டில் தான் ஸ்ரீதரை சந்திக்க முடிவு செய்துள்ளார். காரணம், ஸ்ரீதர் தோட்டத்திற்கு வந்தால், எம்.ஜி.ஆர் காலில் விழுந்துவிட்டார் என்றும், எம்.ஜி.ஆர் ஸ்ரீதர் வீட்டுக்கு சென்றால், வெற்றிக்காக கைகோர்க்கிறார் என்று பேச்சு வரும் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட ஸ்ரீதர் இல்லை நானே அவரை தோட்டத்தில் சந்திக்கிறேன் என்று கூறி அதன்படியே சந்தித்துள்ளார். அப்போது படத்தை இயக்கி நிதியுதவிக்காக, எம்.ஜி.ஆர் தன் கைபட எழுதிய கடிதத்தை கொடுத்து ஃபைனான்சியரிடம் கொடுத்தால் இந்த படத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இந்த தகவலை பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப் ஓஎச். சினிமா யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment