Advertisment
Presenting Partner
Desktop GIF

நாடக கம்பெனியில் மோதல்: கைது செய்ய தேடிய போலீஸ்; முதல் பட வாய்ப்புக்காக எம்.ஜி.ஆர் சந்தித்த தடைகள்!

முதல் பட வாய்ப்புக்காக போலீஸ் புகாரில் இருந்து தப்பித்து நடிக்க வந்துள்ளார் எம்.ஜி.ஆர். இதற்கு முக்கிய காரணம் யார் தெரியுமா?

author-image
WebDesk
New Update
MGR Classic

எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்த எம்.ஜி.ஆர், திரைத்துறையில் முக்கிய நடிகராக இருந்திருந்தாலும், அவரின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சியில், கேரளாவில் நீதிபதியாக பதவியில் இருந்து கோபால் மேனன் இலங்கையில் சில ஆண்டுகள் அவர் வேலை செய்து வந்தபோது, 1917-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் பிறக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பா கோபால் மேனன் இறந்துவிட்ட சத்தியபாமா மகன்கள் சக்ரபாணி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருடனும் வேலு நாயர் என்பவர் உதவியுடன் கும்பகோணம் வருகிறார். வேலு நாயர் வேலை பார்த்த மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் எம்.ஜி.ஆர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார்.

அறிமுகமாக புதிதில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்த எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் பெண் வேடத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்பிறகு நாடக கம்பெனியில் இவருக்கான மரியாதை உயர்ந்து இவரை தனியாக கவனிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்துள்ளார். இதற்காக மதுரை பாய்ஸ் நாடக கம்பெனி மட்டுமல்லாமல், கந்தசாமி முதலியாரின் நாடக கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் நடிப்பு பயிற்சிக்காக வேலை செய்துள்ளார்.

அப்போது அதனைத்து நாடக கம்பெனிகளும் திரைப்பட துறையில் கால் பதிக்க தொடங்கிய நிலையில், மதுரை பாய்ஸ் கம்பெனியில் பதிபக்தி என்ற நாடகத்தை படமாக எடுக்க முடிவு செய்து அதற்காக வேலைகளை தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு இல்லை என்பதை அவர் தெரிந்துகொள்கிறார். இதனால் மதுரை பாய்ஸ் கம்பெனியின் போட்டியான கந்தசாமி முதலியாரின் நாடக கம்பெனி சதிலீலாவதி என்ற படத்தை எடுக்க இருப்பதை அறிந்து அங்கு சென்று வாய்ப்பு கேட்டுள்ளார்.

எம்.கே.ராதா நாயகனாக நடித்த இந்த படத்தில் எம் ஜி.ஆருக்கு துப்பறியும் போலீஸ் அதிகாரி வேஷம் கிடைக்கிறது. இதற்கான முதல் சம்பள முன்பணமாக அப்படத்தின் தயாரிப்பாளர் மருதாச்சல செட்டியார் ரூ100 கொடுத்துள்ளார். அதன்பிறகு இந்த கம்பெனியில் படம் எடுக்கும் வரை பிழைப்புக்காக மதுரை பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆர் அவரது அண்ணன் சக்கரபாணியுடன் வேலை பார்த்துள்ளார்.  ஒரு கட்டத்தில் ஒரு வாரத்தில் சதிலீலாவதி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அனைவரும் வந்துவிடுங்கள் என்று எம்.ஜி.ஆருக்கு அழைப்பு வருகிறது.

மதுரை பாய்ஸ் கம்பெனியில் இருந்து எப்படி கிளம்புவது என்று தெரியாமல் இருந்த எம்.ஜி.ஆர் தனது அம்மாவடம் சொல்ல, அவரோ எங்களை இங்கிருந்து போக விட மறுக்கிறார்கள் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர் ஓடிவிட்டது தெரிந்த மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி அவர் மீது பொருட்கள் திருடியதாக புகார் கொடுக்க, அப்போது தான் அவர் மீது எம்.ஜி.ஆர் அம்மா புகார் கொடுத்துள்ளது தெரிகிறது.

நாடக கம்பெனி முதலாளி பணக்காரர் என்பதால், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸ் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது அண்ணனை கைது செய்ய முயற்சிக்க, எம்.ஜி.ஆரின் அம்மா துணிச்சலாக போலீஸ் உயர் அதிகாரிக்கு புகார் கொடுத்து இதனை தடுத்து நிறுத்தியுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் சதிலீலாவதி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment