Advertisment

ஹீரோவாக முதல் படம்... பாதியில் ஓட நினைத்த எம்.ஜி.ஆர் : மனதை மாற்றிய நடன இயக்குனரின் பேச்சு

எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான அசோக் குமார் படத்தில் அவரது கண்களை எடுக்கும் பணியாளாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
MGR Chakravarthi thirumagal

எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாகவும் அரசியலில், முதல்வராகவும் இருந்து நாட்டு மக்கள் மத்தியில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றுள்ளவர் தான் எம்.ஜி.ஆர். அதே சமயம் சினிமாவில் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இல்லை என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

1936-ம் ஆண்டு எம்.கே.ராதா நாயகனாக நடித்து வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் தான் எம்.ஜி.ஆர் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றிருந்தாலும், அடுத்தடுத்து இவருக்கு அதே போன்ற கேரக்டர்கள் தான் கிடைத்துள்ளது. இதனால் நடிக்கலாமா வேண்டாமா என்ற எண்ணத்திலேயே பல பட வாய்ப்புகளை தவறவிட்டுள்ளார். அதே சமயம் வித்தியாசமான கேரக்டர்களில் சில படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான அசோக் குமார் படத்தில் அவரது கண்களை எடுக்கும் பணியாளாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். பல போராட்டங்களுக்கு பிறகு 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி திரைப்படம் தான் எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்த முதல் திரைப்படம். இந்த படத்திற்கு முன்பே ஒரு படத்தில் நாயகனாக நடித்து வந்த எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டு அந்த படத்தில் பி.யூ.சின்னப்பாவை நாயகனாக வைத்து படத்தை எடுத்திருந்தனர்.

இதன் காரணமாக ராஜகுமாரி படத்திலும், அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் உறுதியாக இருந்துள்ளார். ஆனாலும் கோவையில் நடைபெற்று வந்த இந்த படம் பல தடைகளை கடந்தே தயாராகி வந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல், எடுத்தவரை படத்தை போட்டு பார்த்த, தயாரிப்பாளர் ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் சோமு, மற்றும் அவருடன் இருந்த இணை தயாரிப்பாளர்களுக்கு படம் அவ்வளவாக திருப்தி இல்லை. இதனால் படத்தை இத்தோடு கைவிட்டுவிடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

அதே சமயம் ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் சோமு பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கிறது. மீதி இருப்பதையும் எடுத்துவிட்டு அதன்பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் அதற்கு முன்பு தயாரித்த 2 படங்கள் தோல்வியை தழுவியதால், 3-வது தோல்வியை சந்திக்க தயாராக இல்லை என்று சொன்னாலும் ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் சோமு கூறியதை தொடர்ந்து ஒப்புக்கொண்டனர். இதன் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகவே நடந்ததால் 18 மாதங்கள் நீண்டுள்ளது.

இதனிடையே தனக்கு பேசிய சம்பளத்தை முழுவதுமாக வாங்கிவிட்ட எம்.ஜி.ஆர் அடுத்து படப்பிடிப்பிடிப்பின்போது தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் என்ன செய்வது என்று தெரியாமல், படத்தின் பாதியிலேயே கோவையில் இருந்து சென்னை திரும்பி விடலாம் என்று யோசித்த எம்.ஜி.ஆர் அதற்காக முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை சந்தித்த அந்த படத்தின் நடன இயக்குனர் குமார் என்பவர், உங்களை நாயகனாக வைத்து படம் எடுக்க யாரும் தயாராக இல்லை. ஆனால் ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் சோமு உங்களை நாயகனாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.

அதனால் அவர் விருப்பத்தின்படி இந்த படத்தில் நடித்து முடிக்காமல், நீங்கள் இந்த ஸ்டூடியோவில் இருந்து வெளியில் செல்ல கூடாது என்று கூறி ரூ1800 பணம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை உங்களால் முடியும்போது திருப்பி கொடுங்கள். இதை வைத்தக்கொண்டு படப்பிடிப்பில் கலந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தயாரிப்பாளர்கள் படம் சரியில்லை கைவிட்டுவிடலாம் என்று நினைத்த ராஜகுமாரி திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆருக்கு முன்னணி நாயகன் என்ற அந்தஸ்தையும் கொடுத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment