Advertisment

பெண்ணுடன் வாள் சண்டையா? முடியாது... மறுத்த எம்.ஜி.ஆர் : பிறகு நடந்தது என்ன?

எம்.ஜி.ஆர் – சிவாஜி நடிப்பில் வெளியான கூண்டுக்கிளி படத்தை இயக்கியவர் டி.ஆர்.ராமண்ணா

author-image
WebDesk
New Update
MGR Guleba.

எம்.ஜி.ஆர் - குலேபகாவலி

க்ளாசிக் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் டி.ஆர்.ராமண்ணா. தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்படும் டி.ஆா.ராஜகுமாரியின் சகோதரரான இவர், எம்.ஜி.ஆர் – சிவாஜி இணைந்து நடித்த ஒரே பாடமான கூண்டுக்கிளி படத்தை இயக்கியவர். 1953-ம் ஆண்டு வெளியான வாழ பிறந்தவள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Advertisment

டி.ஆர்.ராஜகுமாரி, பி.எஸ்.சரோஜா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படம் வெற்றியை கொடுக்காத நிலையில், அடுத்து எம்.ஜி.ஆர் – சிவாஜி நடிப்பில் வெளியான கூண்டுக்கிளி படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி இருவரையும் ஒன்றாக இயக்கிய இயக்குனர் என்ற பெருமையை பெற்ற டி.ஆர் ராமண்ணா இந்த படம் தனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நம்பினார்.  

படம் வெளியானபோது, எம்.ஜி.ஆர் – சிவாஜி ரசிகர்கள் தியேட்டரில் சண்டை போட்டதால், படம் முதல் நாளில் சில காட்சிகளோடு நிறுத்தப்பட்டது. முதல் படம் தோல்வி, 2-வது படம் மோதல் என்பதால் சோகத்தில் இருந்த டி.ஆர்.ராமண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் கை கொடுத்தார். 3-வதாக டி.ஆர்.ராமண்ணா இயக்கிய குலேபகாவலி என்ற படத்தின் நாயகன் எம்.ஜி.ஆர் தான் கமர்ஷியல் அம்சங்களுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் கொடுத்த வெற்றியில் இருந்த ராமண்ணா அடுத்து இயக்கிய படம் தான் புதுமை பித்தன். இந்த படத்திலும் எம்.ஜி.ஆர் தான் நாயகனாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர் – பி.எஸ்.சரோஜா இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் இவர்கள் இருவரும் வாள்சண்டை போடுவது போன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டது. இந்த காட்சி படமாக்கப்படும்போது எம்.ஜி.ஆர் பெண்ணுடன் சண்டை போடுவதா? முடியாது என்று மறுத்துள்ளார்.

ஒரு பெண்ணுடன் நான் சண்டை போட்டால் ரசிகர்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட டி.ஆர்.ராமண்ணா, இந்த காட்சி படத்திற்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் வேண்டுமென்றால் இடது கையால் சண்டைபோடுங்கள். உங்கள் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமான இருக்கும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் அதன்பிறகு அரைமனதுடன் ஒப்புக்கொண்டு அந்த காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சி அந்த படத்தில் சிறப்பாக அமைந்தது என்றால் அதற்கு நடிகை பி.எஸ்.சரோஜாவும் ஒரு காரணம். அவர் தான் டி.ஆர்.ராமண்ணாவின் 2-வது மனைவி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment