Advertisment

பெங்களூரு டூ சென்னை... டெலிபோனில் பாடல் கொடுத்த கண்ணதாசன் : இந்த பாட்டு தானா?

தமிழ் சினிமா வரலாற்றில் 14 நாட்களில் தயாராகி 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம் என்றால் அது முகராசி தான்.

author-image
WebDesk
New Update
MGR Kannadasan

எம்.ஜி.ஆர் - கண்ணதாசன்

தமிழ் சினிமாவில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் கவியரசர் கண்ணதாசன், சுடுகாட்டில் வெட்டியான் ஒருவர் பாடும் பாடலை டெலிபோனிலேயே சொல்லி அந்த பாடலை வெற்றிப்பாடலைாக மாற்றிய பெருமைக்கும் சொந்தக்காரர்.

Advertisment

தமிழ் சினிமாவில் 1950- தொடங்கி 70-களின் இறுதிவரை தனது பாடல்கள் மூலம் பல தத்துவ முத்துக்களை அள்ளிக்கொடுத்தவர் கண்ணதாசன். இன்பம் துன்பம், காதல், சோகம், என நவரசங்களையும் தனது பாடல் மூலம் ஒலிக்க செய்த கண்ணதாசன் எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்த கண்ணதாசன், கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என பன்முற திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். அதோடு மட்டுமல்லாமல் தனது பாடல்களால் தத்துவங்களை அள்ளிக்கொடுத்த கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பணியாற்றிய அத்தனை படங்களும் க்ளாசிக் சினிமாவில் உச்சம் தொட்ட படங்களாக அவற்றின் பாடல்கள் இன்னும் ரசிக்கக்கூடிய வகையில் இன்றைய வாழ்க்கைக்கு ஒத்துப்போகக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் 1966-ம் ஆண்டு வெளியான முகராசி படத்தில் நடந்த சுவாரஸ்யமாக சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. இந்த படம் வெளியாகும் முன்பே, படம் வெளியானால் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் வேறு படத்திற்கு போக கூடாது அப்படி போனால் அதுவும் எம்.ஜி.ஆர் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று யோசித்து முகராசி என்ற படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழ் சினிமா வரலாற்றில் 14 நாட்களில் தயாராகி 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படம் என்றால் அது முகராசி தான். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இணைந்து நடித்த இந்த படத்தில் ஜெமினி கணேசன் நடித்திருந்தார். இது எம்.ஜி.ஆருடன் அவருக்கு முதலுமு் கடைசியுமான படம். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு கவிஞர் வாலி பாடல்கள் எழுத ஒப்பந்தமாகிறார். முதல் பாடல் சுடுகாட்டில் வெட்டியான் பாடுவது போல் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

கவிஞர் வாலி பல பாடல்களை எழுதி கொடுக்கிறார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் சின்னப்ப தேவருக்கு அந்த பாடல்கள் அனைத்துமே பிடிக்கவில்லை. இதனால் கண்ணதாசனை அழைத்து பாடல் எழுத வைக்கலாம் என்று யோசிக்கிறார்கள். ஆனால் அரசியல் மோதல் காரணமாக எம்.ஜி.ஆர் கண்ணதாசன் இடையே பேச்சுவார்த்தை இல்லை. ஆனாலும் சின்னப்ப தேவர் கண்ணதாசனை வைத்து எழுத ஆசைப்பட்டு எம்.ஜி.ஆரிடம் சொல்கிறார்.

இதை கேட்ட எம்.ஜி.ஆர் உங்கள் விருப்பம் என்று சொல்லிவிடுகிறார். இதனால் சந்தோஷமாக சின்னப்பதேவர், உடனடியாக கண்ணதாசனுக்கு அழைப்பு விடுக்க அவர் ஊரில் இல்லை. பெங்களூருவில் இருக்கிறார் என்று தெரிகிறது. அதன்பிறகு அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு போன் செய்த சின்னப்ப தேவர், நிலைமையை எடுத்து சொல்கிறார். அவரின் நிலையை புரிந்துகொண்ட கண்ணதாசன் பாட்டு எழுத சம்மதித்து சுட்சிவேஷனை கேட்கிறார்.

சின்னப்பதேவரும் சுட்சிவேஷனை சொல்ல, கண்ணதாசன் பாடல் எழுதி முடித்துவிட்டு அதை டெலிபோனிலேயே சொல்கிறார். நேரில் வந்தால் நாட்கள் இழுக்கும் படத்தை சொன்ன தேதியில் முடிக்க முடியாது என்பதால் டெலிபோனில் கண்ணதாசன் சொல்ல சொல்ல சின்னப்பதேவர் பாடலை எழுதிக்கொள்கிறார். இந்த பாடலை பார்த்ததும் சின்னப்ப தேவருக்கு பிடித்துபோக அதை எம்.ஜி.ஆரிடம் காட்டுகிறார்.

பாடலை படித்த எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போய் எனக்காக ஏன் அவரை வேண்டாம் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் அனைத்து பாடல்களையும் அவரை வைத்தே எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட முகராசி படத்தில் அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதியுள்ளார். அப்படி அவர் டெலிபோனில் சொன்ன பாடல் தான் ‘’உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேர்’’ என்ற பாடல்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kannadasan Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment