க்ளாசிக் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்த எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகியோருக்கு தனது இசையின் மூலம் பல வெற்றிகளை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அதேபோல் ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதில் எம்.ஜி.ஆரின் ஒளி விளக்கு மற்றும் சிவாஜியின் லட்சுமி கல்யாணம் ஆகிய படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படம் ஒளி விளக்கு. இந்த படத்திற்கு இசையமைத்தபோது எம்.எஸ்.வி டியூன் ரெடி பண்ண, அதற்கு பாடல் எழுதிய வாலி, நேராக எம்.ஜி.ஆரிடம் சென்று பாடலை காட்டியுள்ளார். அந்த பாடல் தான் ‘’தைரியமாக சொல் நீ மனிதன் தானா’’ என்ற பாடல். இதை கேட்ட எம்.ஜி.ஆர் பாடல் வரி அருமையாக இருக்கிறதே என்று பாராட்டியுள்ளார்.
அதன்பிறகு இந்த பாடலை கேட்ட வாலி, தனக்கு பிடிக்கவில்லை வரியை மாத்துங்க என்று கூறியுள்ளார். ஆனால் வாலி, எம்.ஜி.ஆருக்கு இந்த பாடல் பிடித்துவிட்டது அதனால் மாற்ற முடியாது என்று கூறியுள்ளார். இது குறித்து எம்.ஜி.ஆரிடம் பேசிய எம்.எஸ்.வி, சிவாஜியின் லட்சுமி கல்யாணம் படத்தில் யாரடா மனிதன் இங்கே என்று ஒரு பாடல் இருக்கிறது. அந்த பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். இரண்டு படங்களுக்கும் நான் தான் மியூசிக். இரண்டு பாடல்களுக்கும் டி.எம்.எஸ் தான் பாடுகிறார்.
முதலில் சிவாஜி படத்தில் பாடிவிட்டார். அடுத்து இந்த படத்தில் பாட வேண்டும். இதனால் தான் பாடலை மாற்ற வேண்டும் என்று சொல்ல இதற்கு எம்.ஜி.ஆர் கண்ணதாசனை சமாதானம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். இதில் சிவாஜியின் லட்சுமி கல்யாணம் படத்தை கண்ணதாசன் தயாரித்து யாரடா மனிதன் இங்கே என்ற பாடலையும் அவர் எழுதியிருந்தார்.
இதனால் கண்ணதாசனை சந்தித்த எம்.எஸ்.வி பாடலை மாற்றி தருமாறு கேட்க, பதிவு செய்த பாடலை எப்படி மாற்ற முடியும் என்று கண்ணதாசன் கடுமையாக பேசியுள்ளார். அதன்பிறகு இந்த இரண்டு பாடல்களையும் கேட்ட எம்.ஜி.ஆர், மனிதன் என்ற வார்த்தை தான் இரண்டு பாடலுக்கும் பொதுவாக இருக்கிறது. அதனால் பரவாயில்லை. வாலி எழுதிய பாடலையே பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”