Advertisment

எம்.ஜி.ஆர் கொடுத்த அசைவ பிரியாணி; தடையாக இருந்த அம்மா உத்தரவு: சரோஜாதேவி ஃப்ளாஷ்பேக்

அரசியலில் முதல்வராக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த எம்.ஜி.ஆர் இன்றைய நடிகர்களுக்கு கட்சி தொடங்கிய ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு வந்தவரே அவர் தான் என்று சொல்லலாம்.

author-image
WebDesk
New Update
Saroja Devi

எம்.ஜி.ஆர் - சரோஜா தேவி

தமிழ் சினிமாவில் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் என்று பல பட்டங்களை பெற்று தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை செலுத்தி கொடி கட்டி பறந்தவர் தான் எம்.ஜி.ஆர். ஒரு நாடக நடிகராக இருந்து அதன்பிறகு திரைத்துறையில் துணை நடிகரான அறிமுகமாகி பின்னாளில் முன்னணி நாயகனாக உயர்ந்த எம்.ஜி.ஆர் திரைத்துறையில் மட்டுமல்லாமல் மக்களுக்கும் பல உதவிகளை செய்துள்ளார்.

Advertisment

அரசியலில் முதல்வராக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த எம்.ஜி.ஆர் இன்றைய நடிகர்களுக்கு கட்சி தொடங்கிய ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டு வந்தவரே அவர் தான் என்று சொல்லலாம். நடிப்பிலும் அரசியலிலும் தான் பெரிய ஆளுமையாக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தன்னுடன் இருப்பவர்களுடன் சகஜமாக பேசி பழக்கூடியவர் தான் எம்.ஜி.ஆர். அவருடன் நடித்த பலரும் இது பற்றி கூறியுள்ளனர்.

அந்த வகையில் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னாளில் பெரிய முன்னணி நடிகையாக வளர்ந்த சரோஜா தேவி எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் தனக்கு அசைவ பிரியாணி கொடுத்தாக ப்ளாஷ்பேக் ஒன்றை கூறியுள்ளார், இது குறித்து அவர் கூறுகையில், நாடாடி மன்னன் படம் தான் நான் எம்.ஜி.ஆருடன் இணைந்த நடித்த முதல் படம். இந்த படத்தில் நான் வரும்போது தான் படம் கலராக இருக்கும்.

தனது படத்தில் நடிக்கும் நடிகைகள் நல்ல அறிமுகம் கிடைக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கும் எம்.ஜி.ஆர், பல சமயங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு சொல்லிக்கொடுத்துள்ளார். அவர் செட்டிற்கு வந்தாலே ஆயிரம் சூரியன் வருவது பொல் இருக்கும். அவரது பிறந்த நாளை கொண்டாமாட்டார். அவரது ரசிகர்கள் தான் கொண்டாடுவார்கள் பலமுறை அவரது பிறந்த நாளில் அவர் ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார்.

அதே சமயம் என் பிறந்த நாளில் எனக்கு முதல் வாழ்த்து அவரிடம் இருந்து தான் வரும். ஒருமுறை எனது பிறந்த நாளில் ஜானகி அம்மாளுடன் காலையிலேயே வீட்டுக்கு வந்து என்னை வாழ்த்திவிட்டு சென்றார். ஒருமுறை நான் ஆணையிட்டால் என்றந படத்தின் ஷூட்டிங்கில் பிரேக் விட்டபோது எம்.ஜி.ஆர் எனக்கு அசைவ பிரியாணி கொடுத்தார். இன்று சனிக்கிழமை நான் அசைவம் சாப்பிடமாட்டேன். சனிக்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார் என்று சொன்னென்.

அதன்பிறகு ஷூட்டிங் முடிய 12 மணி ஆகிவிட்டது. அப்போது பிரியாணி கொடுத்து 12 மணி அடுத்த நாள் வந்துவிட்டது இப்போது சாப்பிடு என்றார். எங்களை பொறுத்தவரை காலை 6 மணிக்கு சூரியன் உதயமானால் தான் அடுத்த நாள் பிறக்கும். இதுவும் என் அம்மா சொல்லிக்கொடுத்தது தான் என்று சொன்னேன்.இதை கேட்ட எம்.ஜி.ஆர், இந்த சின்ன வயசிலேயே இந்த பொண்ணு அம்மா பேச்சை தட்டாமல் கேட்கிறா பாரு! என்று பெருமையாக சொன்னார். அது இன்னமும் என் காதுகளில் கேட்டுக்கிட்டே இருக்கு என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment