Advertisment

சாப்பிட இலை போட்ட பிறகு எழுந்த வாலி; கையைப் பிடித்த எம்.ஜி.ஆர்; மிளிர்ந்த மனித நேயம்

திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆர் - வாலி இருவரின் நட்பும் மிகவும் ஆழமானது என்று அனைவரும் அறிந்த ஒன்று

author-image
WebDesk
New Update
MGR Vaali

எம்.ஜி.ஆர் - வாலி

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற்றவர் தான் எம்.ஜி.ஆர். அதேபோல் தன்னை சந்திக்க யார் வந்தாலும் முதலில் அவர்களை சாப்பிட வைத்துவிட்டு தான் பேசுவர் என்று சொல்வார்கள் அது போன்ற ஒரு நிகழ்வை கவிஞர் வாலி பகிர்ந்துள்ளார்.

Advertisment

சினிமாவில் கண்ணதாசன் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அவருக்கு போட்டியாக பாடல் எழுதி பிரபலமானவர் தான் கவிஞர் வாலி. ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆரின் முக்கிய பாடல் ஆசிரியராக மாறியவர் வாலி. அதன்பிறகு இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து, எம்.ஜி.ஆரின் அத்தனை படங்களுக்கும் வாலியே பாடல் எழுதும் நிலை உருவானது.

அதேபோல் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் இவர்கள் இருவரின் நட்பும் மிகவும் ஆழமானது என்று அனைவரும் அறிந்த ஒன்று. அரசியலில் புதிய கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் நடிப்பதை குறைத்துகொண்டாலும் இவர்களுக்கு இடையிலான நெருக்கம் அப்படியே தான் இருந்தது. அதேபோல் எம்.ஜி.ஆர் படங்களை தவிர்த்து மற்ற நடிகர்களுக்கும் வாலி ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆர் – வாலி இருவருக்கும் இடையே எந்த அளவிற்கு நெருக்கம் இருந்ததோ அந்த அளவிற்கு மோதலும் இருந்துள்ளது. ஆனால் திரை வாழ்க்கையில் அந்த மோதல் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதனிடையே ஒருமுறை எம்.ஜி.ஆரை பார்க்க மதியவேளையில் சென்றிருந்த வாலியை சாப்பிடுமாறு எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் நடிகை லதா, வாலி ஆகியோர் அமர உணவு பரிமாறப்பட்டுள்ளது.

அப்போது திடீரென வாலி எழுந்திரிக்க, ஏன் என்னாச்சு என்று எமம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். என்னுடன் பாவலர் என்ற ஒருவர் வந்திருக்கிறார். அவரை சத்யா ஸ்டூடியோவின் அருகில் இருக்கும் ஹோட்டலில் சென்று சாப்பிட்டு வர சொல்கிறேன் என்று வாலி கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் நீங்கள் உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு, அவரே வெளியில் சென்று, இங்கு வாலியுடன் வந்த பாவலர் யார் என்று கேட்க, அவரோ நான் தான் என்று பயத்துடன் கையை தூக்கியுள்ளார்.

அவரை பார்த்த எம்.ஜி.ஆர் நீங்கள்தானா அது வாங்க என்று அழைத்து சென்று தனது அருகில் அமர வைத்து உணவு பரிமாறியுள்ளார். தன்னை பார்க்க வந்தவர் வாலிதான் என்றாலும், அவருடன் வந்த ஒருவரை தன் அருகில் அமர வைத்து உணவு பரிமாறியவர் எம்.ஜி.ஆர் என்று கவிஞர் வாலி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment