கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்தால் அந்த பாடல் ஹிட் என்ற பேச்சு தமிழ் சினிமாவில் உலாவி வந்த காலக்கட்டத்தில் இருவரும் ஒரு பெரிய ஹிட் பாடலை கொடுக்க வேண்டும் என்பதற்காக 2 மாதங்கள், கிட்டத்தட்ட 300-400 டியூன்கள் இசையமைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளார். அந்த பாடல் என்ன தெரியுமா?
Advertisment
தமிழ் சினிமாவில் மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் உயிர்கொடுத்தவர் கண்ணதாசன். கவியரசர் என்று அழைக்கப்படும் கண்ணதாசன், தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து கண்ணதாசன் எழுதிய அனைத்து பாடல்களும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதேபோல் இவர்கள் இருவரும் கம்போசிங் செய்யும்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் நெஞ்சம் மறப்பத்தில்லை என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் குறித்து எம்.எஸ்.வி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர் என்று அழைக்கப்பட்ட இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், 1963-ம் ஆண்டு வெளியான படம் நெஞ்சம் மறப்பதில்லை. கல்யாண்குமார் தேவிகா இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்
அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். குறிப்பாக இந்த படத்தில் வரும் நெஞ்சம் மறப்பதில்லை பாடல் இன்றுவரை பலரும் விரும்பி கேட்கும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது. இந்த பாடல், படத்தில் 4 முறை சில மாற்றங்களுடன் இடம்பெற்றிருக்கும். இந்த பாடல் கம்போசிங்கின்போது, இயக்குனர் ஸ்ரீதர் படத்திற்கு நெஞ்சம் மறப்பதில்லை என்று டைட்டில் வைத்திருக்கிறேன். அதேபோல் இந்த பாடலை யாரும் மறந்துவிட கூடாது என்று எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரிடமும் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இதன் காரணமாக இந்த பாடலை பெரிய ஹிட்டாக்க வேண்டும் என்று நினைத்த எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரும் 2 மாதங்கள் ஓய்வில்லாமல் டியூன் அமைத்து பாடலை உருவாக்கியுள்ளனர். இந்த பாடலுக்கான கிட்டத்தட்ட 300-400 டியூன்கள் போட்டுள்ளார் எம்.எஸ்.வி. இதில் கண்ணதாசனுக்கு பிடித்தால் எம்.எஸ்.விக்கு பிடிக்கவில்லை. எம்.எஸ்.விக்கு பிடித்தால் கண்ணதாசனுக்கு பிடிக்கவில்லை. சில டியூன்கள் இவர்கள் இருவருக்கும் பிடித்திருந்தால், இயக்குனர் ஸ்ரீதருக்கு பிடிக்காமல் போயுள்ளது. கடைசியில் ஒருவரியாக மூவருக்கும் பிடித்த டியூன்தான் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை பாடல்.
இந்த பாடல் இன்றும் வரவேற்பை பெற்று வருகிறது. அன்று இந்த பாடதலை உருவாக்கியது வேதனையாக இருந்தது. ஆனால் இன்று அந்த பாடல் சாதனையாக மாறியுள்ளது என்று எம்.எஸ்.வி குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“