Advertisment
Presenting Partner
Desktop GIF

3 நாட்கள் போராட்டம்: வார்த்தை வராமல் தவித்த கண்ணதாசன்; கடைசியில் எம்.எஸ்.வி கொடுத்த ஷாக்!

கண்ணதாசன் 3 நாட்கள் போராடி எழுதிய ஒரு பல்லவியை பார்த்த எம்.எஸ்.வி, இதை மாற்றி கொடுங்கள் என்று சொல்ல, கண்ணதாசன் கடுப்பாகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kannadassan MSV Classic

தமிழ் சினிமாவில் க்ளாசிக் ஹிட் பாடல்களை எடுத்துக்கொண்டால், அதிகமாக கண்ணதாசன் – எம்.எஸ்.வி கூட்டணியில் வெளியான பாடல்களை தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு, இசையும் பாடலும் இணைந்த இந்த கூட்டணியில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இருவரும் இணைந்து மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் கண்ணதாசன் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.

Advertisment

கண்ணதாசன் முதன் முதலில் சினிமாவில் பாடல் எழுதிய திரைப்படம் கன்னியின் காதலி. அந்த காலத்தில் முக்கிய சினிமா ஸடூடியோவாக திகழ்ந்த ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் பல படங்களை தயாரித்து வந்த நிலையில், இங்கு இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல் எழுத வரும் கவிஞர்களுக்கு டியூனை வாசித்து காட்டி பாடல் எழுதி வாங்கிக்கொள்வது தான் எம்.எஸ்.வி வேலை.

அந்த வகையில் கன்னியின் காதலி படத்தில் முதன் முதலாக பாடல் எழுத வாய்ப்பினை பெற்ற கண்ணதாசன், ‘’கலங்காதிரு மனமே’’, ‘’புவி ராஜா’’ என இரண்டு பாடல்களை முடிக்கப்பட்ட பின் 3-வது பாடல் மெட்டு அமைத்து அதற்கு பாடல் எழுதுமாறு கூறியுள்ளனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்த இந்த மெட்டை, எம்.எஸ்.விஸ்வநாதன் வாசித்து காட்டியுள்ளார். இதற்காக பாடல் எழுத முயற்சித்த கண்ணதாசனுக்கு சரியாக வார்த்தைகள் அமையாவில்லை.

3 நாட்களாக கண்ணதாசன் பாடல் எழுத போராடிய நிலையில், இந்த புதுப்பையன் பாடல் எழுதி கொடுக்கவில்லை என்று யூனிட்டில் இருந்த அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதனால் இரவு பகலாக முயற்சித்து ‘’காரணம் தெரியாமல் உள்ளம் கலிகொண்டே கூத்தாடுதே’’ என்ற பல்லவியை எழுதி கொடுத்துள்ளார். பல்லவியை வாசித்து பார்த்துவிட்டு, மெட்டுக்கு சரியாக பொருந்துகிறது. ஆனால் அது என்ன கலி கூத்து என்று. இந்த வார்த்தைகளை மாற்றி தாருங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisement

3 நாட்களாக போராடி எழுதிய பல்லவியை நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு மாற்றி தர சொல்கிறானே என்று கண்ணதாசன் கடப்பாகியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அப்போதைய முன்னணி கவிஞரான உடுமலை நாராயணகவி, ‘’காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே’’ இதை வாசி என்று கூறியுள்ளார். இதை வாசித்த எம்.எஸ்.வி சரியாக இருக்கிறது என்று சொல்ல, இதையே வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு, கண்ணதாசனை தனியாக அழைத்துள்ளார்.  

நீ எழுதிக்கொடுத்து அற்புதமாக தமிழ் வார்த்தைகள். ஆனால் அது இவர்களுக்கு புரியாது. அதனால் இவர்களுக்கு புரிகிற மாதிரி என்ன தேவையே அதை எழுதி கொடு. அப்போது தான் சினிமாவில் நீ பாடல் எழுத முடியும் என்று கூறியுள்ளார். உடுமலை நாராயணகவியின் இந்த வார்த்தைகளை கண்ணதாசன் கடைசிவரை கடைபிடித்துள்ளார். முதல் சந்திப்பு மோதலில் அமைந்தாலும், பின்னாளில்ல, கண்ணதாசன் – எம்.எஸ்.வி இடையே நெருங்கிய நட்பு உருவாகி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

    msv Kannadasan
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment