Advertisment

20 நாட்கள் அவகாசம் : 3 நாட்களில் முடித்த எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணி : கர்ணன் பாடல் உருவான விதம்!

எம்.எஸ்.வி காம்போவில் வெளியான பல படங்கள் பாடல்களுக்காகவே வெற்றியை பெற்றுள்ளன. அந்த வகையில் வெளியான ஒரு படம்தான் கர்ணன்.

author-image
WebDesk
New Update
MSV Kannadasan Like

கண்ணதாசன் - எம்.எஸ்.வி

இசை உலகில் எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னணியில் இருந்த காலக்கட்டத்தில் ஒரு படத்திற்கு இசையமைப்ப தயாரிப்பாளர் 20 நாட்கள் ரூம் எடுத்து கொடுத்தபோதும், படத்தின் பாடல்களை எம்.எஸ்.வி – கண்ணதாசன் கூட்டணி 3 நாட்களில் முடித்துள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி – கவியரசர் கண்ணதாசன் கூட்டணிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இன்றும் இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இவர்கள் காம்போவில் வெளியான பல படங்கள் பாடல்களுக்காகவே வெற்றியை பெற்றுள்ளன. அந்த வகையில் வெளியான ஒரு படம்தான் கர்ணன்.

1964-ம் ஆண்டு பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் வெளியான படம் கர்ணன். மகாபரத போரை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், சாவித்ரி, தேவிகா, அசோகன் முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்த இந்த படத்தில் 17 பாடல்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

இந்த படத்தை இயக்கிய இயக்குனர் பி.ஆர்.பந்தலுவே படத்தின் தயாரிப்பாளர். தான் சுந்திரமாக படத்தை இயக்க வேண்டும் என்பதால் தயாரிப்பளராகவும் இருந்த பி.ஆர்.பந்தலு, கர்ணன் படத்தை இயக்க முடிவு செய்தபோது, படம் வட நாட்டில் நடக்கும் கதை என்பதால், வட நாட்டு இசையை கொண்டு வர வேண்டும் என்று நினைத்துள்ளார். இதன் காரணமாக படத்திற்கு பாடல்களை உருவாக்க நாட்கள் அதிகமாகும் என்று கருதிய அவர், பாடல்களை உருவாக்குவதற்காக பெங்களூர் உட்லண்ஸ் ஹோட்டலில் 20 நாட்களு்க்கு மேலாக ரூம் எடுத்துள்ளார்.

ரூம் எடுத்தவுடன் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி – டி.கே.ராமமூர்த்தி மற்றும் கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரையும் அந்த ரூமில் இருந்து பாடல்களை உருவாக்குமாறு கூறியுள்ளார். அதன்படி உட்லண்ட் ஹோட்டலில் தங்கிய எம்.எஸ்.வி – கண்ணதாசன் கூட்டணி 3 நாட்களில் அனைத்து பாடல்களையும் உருவாக்கிவிட்டு 4-வது நாளில் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பி.ஆர்.பந்தலு, வடநாட்டு இசை தேவை என்று தான் இவ்வளவு நாட்கள் ரூம் எடுத்தோம். நீங்கள் அதற்குள் முடித்துவிட்டீர்களா என்று பாடல் எப்படி இருக்குமோ என்ற சந்தேகத்துடன் கேட்டுள்ளார்.

அதன்பிறகு அனைத்து பாடல்களையும் எம்.எஸ்.வி வாசித்து காட்ட, அதை கேட்டு பி.ஆர்.பந்தலு வியப்பில் ஆழ்ந்துள்ளார். இந்த பாடல்கள் அனைத்தும் எம்.எஸ்.வி கொடுத்த மெட்டுக்கு கண்ணதாசன் எழுதிய பாடல்கள். 3 நாட்களில் இசையமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த பாடல்கள் 1964-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸில் வரும் ‘’உள்ளத்தில் நல்ல உள்ளம்’’ பாடல் இன்னும் பல மேடைகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan M S Viswanathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment