Advertisment

ஒப்பந்தம் செய்து கழற்றிவிட நினைத்த இயக்குனர் : வீட்டுக்கே சென்று சவால் விட்ட எம்.எஸ்.வி ; என்ன நடந்தது?

ஒரு படத்திற்கு இசையமைக்க தன்னை ஒப்பந்தம் செய்த இயக்குனரின் வீட்டுக்கே சென்று சவால் விட்டுள்ளார் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி

author-image
WebDesk
New Update
MSV

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

தனது மெல்லிசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஒரு படத்திற்கு தன்னை இசையமைக்க ஒப்பந்தம் செய்துவிட்டு பின்னர் பாடல் கம்போசிங்க்கு தன்னை அழைக்காத இயக்குனரின் வீட்டுக்கே சென்று சவால் விட்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

க்ளாசிக் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரிடம் உதவியாளராக பணியாற்றிய எம்.எஸ்.விஸ்வநாதன், ஒரு கட்டத்தில் தனி இசையமைப்பாளராக உருவெடுத்தார். தன்னைப்போலவே உதவியாளராக இருந்த டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள எம்.எஸ்.விஸ்வநாதன், மெல்லிசை மன்னர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

அதேபோல் கவியரசர் கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன் இடையே சினிமாவை தாண்டி தனிப்பட்ட முறையில் நெருங்கிய நட்பு இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று இவர்கள் கூட்டணியில் உருவான பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னணி இயக்குனர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ள எம்.எஸ்.வி, இயக்குனர் பி.ஆர்.பந்தலுவுடன் கர்ணன் உட்பட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

இப்படி இருக்கும்போது தான் புதிதாக இயக்கி தயாரிக்கும் ஒரு படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று எம்.எஸ்.வியிடம் பேசியுள்ளார் பி.ஆர்.பந்தலு. எம்.எஸ்.வியும் ஒப்புக்கொண்ட நிலையில், பல மாதங்கள் கடந்தும் இந்த பாடல் கம்போசிங்கிற்கு எம்.எஸ்.வியை அழைக்கவில்லை. ஏன் இப்படி செய்கிறார் என்று யோசித்த எம்.எஸ்.வி, பி.ஆர்.பந்தலுவின் மேலாளரை சந்தித்து இது குறித்து பேசியுள்ளார்.

எம்.எஸ்.வியின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று அந்த மேலாளர் யோசிக்க, எதுவாக இருந்தாலும் நேரடியாக சொல்லுங்கள் நான் வருத்தப்பட மாட்டேன் என்று எம்.எஸ்.வி கூறியுள்ளார். அதற்கு அந்த மேலாளர், உங்களுக்கு பெரிய சம்பளம் கொடுத்து இதுவரை இசையமைக்க சொன்னார். ஆனால் பந்தலு இப்போது பொருளாதார நெருங்கடியில் இருக்கிறார். அதனால் உங்களுக்கான சம்பளம் அவரால் தர முடியாத நிலை உள்ளது என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட எம்.எஸ்.வி உடனடியாக பந்தலு வீட்டுக் சென்று, நீங்கள் இப்போது உருவாக்கி இருக்கும் கதைக்கு எனது இசை பொருத்தமாக இருக்காது என்று சொல்லுங்கள் நான் விலகிவிடுகிறேன். ஆனால் எனக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று நினைத்து என்னை வேண்டாம் என்று சொன்னால் அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இந்த படத்திற்காக நீங்கள் ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம் என்று எம்.எஸ்.வி கூறியுள்ளார்.

அன்றைய சினிமாவில் ஆரோக்கியமான பல போட்டிகள் இருந்தது. இந்த மாதிரியான பல நிகழ்வுகள் நடந்துள்ளது. ஆனால் இன்றைய சினிமாவில் இதுமாதிரியான நிகழ்வுகளை எதிர்பார்க்க முடியுமா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

M S Viswanathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment