Advertisment

தற்கொலைக்கு முயன்ற தயாரிப்பாளர்... தடுத்து நிறுத்திய ஒற்றை பாடல் : கண்ணதாசன் - எம்.எஸ்.வி கூட்டணி செய்த மேஜிக்

1969-ம் ஆண்டு ரவிச்சந்திரன் – விஜயகுமாரி, முத்துராமன், ராஜாஸ்ரீ ஆகியோர் நடிப்பில் தயாரான படம் அமுதா. இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
MSV Kannadasan Thangai Movie

கண்ணதாசன் - எம்.எஸ்.வி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

படம் தயாரித்து நஷ்டமானதால் தற்கொலை செய்துகொள்ள நினைத்த ஒரு தயாரிப்பாளரை எம்.எஸ்.விஸ்வாநாதன் – கவியரசர் கண்ணதாசன் கூட்டணியில் வெளியான ஒரு பாடல் காப்பாற்றியுள்ள சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.

Advertisment

1969-ம் ஆண்டு ரவிச்சந்திரன் – விஜயகுமாரி, முத்துராமன், ராஜாஸ்ரீ ஆகியோர் நடிப்பில் தயாரான படம் அமுதா. இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு சிக்கல்களையும் சந்தித்துள்ளது.

நிதி பிரச்சனை, நடிகர் நடிகைகள் பிரச்சனை, என பல சிக்கல்களை கடந்து படப்பிடிப்பு ஓரளவுக்கு முடிவுக்கு வரும் சூழல் இருந்தபோது, தயாரிப்பாளர் ரஹ்மானிடம் இருந்த பணம் முழுவதும் காலியாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து படப்பிடிப்பு தொடங்கியபோது, ரவிச்சந்திரனுக்கு திருமணமாகி அவரது மார்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது. நாயகியாக நடித்து வந்த விஜயகுமாரி, அக்கா, அம்மா பாட்டி வேடங்களுக்கு மாறிவிட்டார்.

இந்த படத்தில் 2-வது ஹீரோவாக நடித்து வந்த முத்துராமன், இனிமேல், நாயகனாகத்தான் நடிப்பேன் என்று முடிவு செய்துள்ளார். அதேபோல் ராஜஸ்ரீக்கும் மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், கையில் பணம் இல்லாததால் படப்பிடிப்பு நின்றுவிட்டது. நடிகர் நடிகைளின் செயல்களால் படம் வெற்றி பெறுமா இல்லையா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் எதற்காக இருக்க வேண்டும் என்று நினைத்துள்ளார் தயாரிப்பாளர் ரஹ்மான்.

சினிமாவுக்கு வந்ததே தப்பு என்று நொந்து புலம்பிக்கொண்டிருந்த இவர், இயக்குனர் முக்தா சீனிவாசனை சந்தித்து, பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பணம் இல்லை யாரிடமாவது பணம் வாங்கி கொடுங்கள். இல்லை என்றால் இப்போது இருக்கும் பணத்தை கொடுங்கள் விஷம் சாப்பிட்டு செத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட முக்தா சீனிவாசன், உடனடியாக படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அழைத்து சென்றுள்ளார்.

இங்கு நிலைமையை விளக்கி சொல்ல, எம்.எஸ்.வி புதிதாக ஒரு டியூனை தயார் செய்து, அதை கவியரசர் கண்ணதாசனிடம் அனுப்பி வைத்து பாடல் எழுதுமாறு கூறியுள்ளார். அப்போது எழுதிய பாடல் தான் அன்பே அமுதா என்ற பாடல். படத்தின் தலைப்பை போல், இந்த பாடல் முழுவதும் அமுதா என்ற வார்த்தைகளால் நிரப்பப்பட்டிருக்கும். டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடல், பட்டிதொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சிலோன் ரேடியோவில் இந்த பாடல் அடிக்கடி ஒலிபரப்பாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால், படத்தின் தயாரிப்பாளரான ரஹ்மான், இந்த ஒற்றை பாடலை நம்பி படத்தை வெளியிட்டுள்ளார். படமும் பெரிய வெற்றிப்படமாக மாறி அவரின் கஷ்டங்களை போக்கியுள்ளது. அதே சமயம் படத்திற்கு வரும் மக்கள் கூட்டம், இந்த பாடல் முடிந்தவுடன் கிளம்பி சென்றுவிடுவார்கள் அதன்பிறகு தியேட்டரே காலியாவிடும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

படம் வெற்றியாகுமா, மீதி படப்பிடிப்பை நடத்த பணம் கிடைக்குமா என்று நினைத்துக்கொண்டிருந்த தயாரிப்பாளருக்கு எம்.எஸ்.வி – கண்ணதாசன் கூட்டணியில் கிடைத்த இந்த பாடல் அனைத்து கஷ்டங்களையும் போக்கியுள்ளது. குறிப்பாக இந்த பாடலுக்காக கண்ணதாசன் எம்.எஸ்.வி இருவரும் சம்பளமே பெறவில்லையாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment