/indian-express-tamil/media/media_files/zPVHigKkgvnLK2NudwwC.jpg)
கண்ணதாசன்
எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் எம்.எஸ்.வி இசையில் பாடல் எழுதிய கவியரசர் கண்ணதாசன் நுட்பமாக வரிகளை இணைந்து பாடலை பெரிய வெற்றிப்படலாக கொடுத்திருப்பார். இந்த பாடல் குறித்து பலரும் தெரியாத ஒரு தகவல்.
1963-ம் ஆண்டு ஏ.எஸ்.ஏ சாமி இயக்கத்தில் வெளியான படம் ஆனந்த ஜோதி. ஜாவர் சீதாராமன் கதை எழுதிய இந்த படத்தில் எம்.ஜி.ஆர், தேவிகா, எம்.ஆர்.ராதா, அசோகன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்திருந்த நிலையில், கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த இந்த படத்திற்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார்.
இந்த படம் தான் எம்.ஜி.ஆர் தேவிகா இணைந்து நடித்த ஒரே படம். பி.எஸ்.வீரப்பா இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், குறிப்பாக ‘’பனியில்லாத மார்கழியா’’ என்ற பாடல் காதலர்கள் கொண்டாடும் பாடலாக இன்றுவரை நிலைத்திருக்கிறது. இந்த படத்தில் பள்ளி ஆசிரியராகவும் கவிஞராகவும் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார்.
இதன் காரணமாக படத்தில் கவிநயத்துடன் பாடல்கள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் வந்த பாடல் தான் ‘’பனியில்லாத மார்கழியா’’ பாடல். பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் எம்.ஜி.ஆர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றமற்ற எம்.ஜி.ஆர் தனது காதலி தேவிகா. தம்பி கமல்ஹாசன் ஆகியோரின் உதவியுடன் எப்படி தன்னை நிரூபிக்கார் என்பது தான் இந்த படத்தின் கதை.
படத்தில் தேவிகாவுடன் காதலில் இருக்கும் எம்.ஜி.ஆருக்கு வரும் பாடலான ‘’பனியில்லாத மார்கழியா’’ படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பொதுவாக தமிழ் சினிமாவில் கண்ணதாசன் எழுதிய கேள்வி பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த பாடல் கேள்வியாக அமைந்திருந்தாலும் அந்த கேள்வியிலேயே பதில் வரும்படி அமைந்திருப்பதே இந்த பாடலின் தனிச்சிறப்பாகும்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.