முதல் சந்திப்பில் மோதல்... பின்னாளில் உருவான ஆழமான நட்பு : கண்ணதாசன் - எம்.எஸ்.வி மோதியது ஏன்?

1949-ம் ஆண்டு வெளியான கன்னியின் காதலி படம் தான் கண்ணதாசன் பாடல் ஆசிரியராக அறிமுகமான முதல் படம்

1949-ம் ஆண்டு வெளியான கன்னியின் காதலி படம் தான் கண்ணதாசன் பாடல் ஆசிரியராக அறிமுகமான முதல் படம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MSV Kannadasan Like

எம்.எஸ்.வி - கண்ணதாசன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவியரசர் கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பு இருந்தாலும், ஆரம்பத்தில் இவர்களின் முதல் சந்திப்பு மோதலில் தான் தொடங்கியுள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

தமிழ் சினிமாவில் க்ளாசிக் ஹிட் பாடல்களை எடுத்துக்கொண்டால், அதிகமாக கண்ணதாசன் எம்.எஸ்.வி கூட்டணியில் வெளியான பாடல்களை தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்குஇசையும் பாடலும் இணைந்த இந்த கூட்டணியில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் கண்ணதாசன் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.

கண்ணதாசன் முதன் முதலில் சினிமாவில் பாடல் எழுதிய திரைப்படம் கன்னியின் காதலி. அந்த காலத்தில் முக்கிய சினிமா ஸடூடியோவாக திகழ்ந்த ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் பல படங்களை தயாரித்து வந்த நிலையில், இங்கு இசையமைப்பாளர்கள் பலரும் மாத சம்பளத்திற்கு வேலை பார்த்துள்ளனர். அந்த இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல் எழுத வரும் கவிஞர்களுக்கு டியூனை வாசித்து காட்டி பாடல் எழுதி வாங்கிக்கொள்வது தான் எம்.எஸ்.வி வேலை.

அந்த வகையில் கன்னியின் காதலி படத்தில் முதன் முதலாக பாடல் எழுத வாய்ப்பினை பெற்ற கண்ணதாசன், ‘’கலங்காதிரு மனமே’’, ‘’புவி ராஜா’’ என இரண்டு பாடல்களை எழுதி கொடுத்துள்ளார். இந்த இரண்டு பாடல்களும்எழுதி முடிக்கப்பட்ட பின் மெட்டு போடப்பட்டுள்ளது. ஆனால் 3-வது பாடல் மெட்டு அமைத்து அதற்கு பாடல் எழுதுமாறு கூறியுள்ளனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்த இந்த மெட்டைஅவரிடம் உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் வாசித்து காட்டியுள்ளார்.

Advertisment
Advertisements

இதற்காக பாடல் எழுத முயற்சித்த கண்ணதாசனுக்கு சரியாக வார்த்தைகள் அமையாத நிலையில்3 நாட்களாக போராடியுள்ளார். ஆனால் இந்த புதுப்பையன் பாடல் எழுதி கொடுக்கவில்லை என்று யூனிட்டில் இருந்த அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதனால் இரவு பகலாக முயற்சித்து ஒரு பாடலை எழுதியுள்ளார். அந்த பாடல் தான் ‘’காரணம் தெரியாமல்’’ என்ற பாடல். இந்த பாடலை கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த எம்.எஸ்.விஸ்வநாதன், ‘’காரணம் தெரியாமல் உள்ளம் கலிகொண்டே கூத்தாடுதே’’ என்ற பல்லவியை வாசித்து பார்த்துவிட்டுமெட்டுக்கு சரியாக பொருந்துகிறது. ஆனால் அது என்ன கலி கூத்து என்றுஇந்த வார்த்தைகளை மாற்றி தாருங்கள் என்று கூறியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அப்போதைய முன்னணி கவிஞரான உடுமலை நாராயணகவி, ‘’காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே’’ இதை வாசி என்று கூறியுள்ளார்.

இதை வாசித்த எம்.எஸ்.வி சரியாக இருக்கிறது என்று சொல்லஇதையே வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டுகண்ணதாசனிடம்நீ எழுதிக்கொடுத்து அற்புதமாக தமிழ் வார்த்தைகள். ஆனால் அது இவர்களுக்கு புரியாது. அதனால் இவர்களுக்கு புரிகிற மாதிரி என்ன தேவையே அதை எழுதி கொடு. அப்போது தான் சினிமாவில் நீ பாடல் எழுத முடியும் என்று கூறியுள்ளார். உடுமலை நாராயணகவியின் இந்த வார்த்தைகளை கண்ணதாசன் கடைசிவரை கடைபிடித்துள்ளார்.

முதன் முதலாக பாடல் எழுதிய கண்ணதாசனுக்கு மெட்டு வாசித்து காட்டிய எம்.எஸ்.வி பாடல் நன்றாக இல்லை மாற்றுங்கள் என்று சொல்ல, இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் முடிந்துள்ளது. அதன்பிறகு பின்னாளில், கண்ணதாசன் – எம்.எஸ்.வி இடையே நெருங்கிய நட்பு உருவாகி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் இடம் பெற்ற ''செந்தமிழ் தேன்மொழியால்'' என்ற பாடல் இருவரையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan M S Viswanathan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: