Advertisment

கடுமையான டிராபிக்: காரில் அமர்ந்த கண்ணதாசன்- எம்.எஸ்.வி; 45 நிமிடங்களில் உருவான ஹிட் பாடல்!

டிராபிக்கில் மாட்டிக்கொண்ட எம்.எஸ்.வி - கண்ணதாசன் இருவரும் இயக்குனர் ஸ்ரீதருடன் இணைந்து 45 நிமிடங்களில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
MSV Kannadasan Thangai Movie

எம்.எஸ்.விஸ்வநாதன் - கண்ணதாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன் டிராபிக்கில் மாட்டிக்கொண்டதால், காரில் இருந்தபடியே ஒரு பாடலுக்கு இசையமைத்து அதை ஹிட்டாக மாறியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

க்ளாசிக் சினிமாவில் தனது இசையின் மூலம் பலரின் மனதை மென்மைப்படுத்திய எம்.எஸ்.விஸ்வநாதன், பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அவர் தற்போது இல்லை என்றாலும் அவரது பாடல்கள் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. குறிப்பாக கவியரசர் கண்ணதானுடன் இணைந்து இவர் இசையமைத்த அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

அதேபோல் ஒரு பாடலுக்கு 10 டியூன்களுக்கு மேல் உருவாக்கி இதில் ஒரு டியூனை தேர்வு செய்ய சொல்லும், எம்.எஸ்.வி, நேரம் இல்லாததால் காரிலேயே ஒரு டியூனை உருவாக்கி அதை ஹிட் பாடலாகவும் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குனர் என்று பெயரேடுத்த இயக்குனர் ஸ்ரீதர், இயக்கத்தில் உருவன படம் நெஞ்சில் ஓர் ஆலயம். இந்த படத்தில் கல்யாண்குமார், முத்துராமன் தேவிகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

1962-ம் ஆண்டு உருவான இந்த படத்திற்கு, விஸ்வாதன் ராமமூர்த்தி இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்கள் கம்போசிங் முடிந்தபிறகு இந்த படத்தில் மேலும் ஒரு பாடலை சேர்க்க விரும்பிய இயக்குனர் ஸ்ரீதர் அதற்காக எம்.எஸ்.வியிடம் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவர், சாரதா ஸ்டூடியோவுக்கு காரில் சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது கோடம்பாக்கம் பிரிட்ஜ் இல்லாததால், அங்கு லெவல் க்ளாசிங் போடப்பட்டுள்ளது. இந்த நிலை இருந்தாலும் குறைந்தது 45 நிமிடங்கள் அங்கே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்றைய தினத்தில் எம்.எஸ்.வி இயக்குனர் ஸ்ரீதர், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவருமே அந்த க்ளாசிங்கில் மாட்டிக்கொண்டு 3 கார்களும் வரிசையாக நின்றுகொண்டு இருந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிட கூடாது என்று முடிவு செய்த மூவரும் இயக்குனர் ஸ்ரீதரின் காரில் அமர்ந்து 45 நிமிடங்களில் ஒரு டியூன் போட்டு ஒரு பாடலை ஒருவாக்கியுள்ளனர். அந்த பாடல்கள் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம் பெற்ற ‘’முத்தான முத்தல்லவோ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் கேட்பதற்கு ஒரு சுமான ராகமாக இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment