ஷூட்டிங்கில் பாம்புடன் விளையாட்டு; ஸ்ரீதேவியை கதறவிட்ட ரஜினிகாந்த்: ராதிகா சொன்ன க்ளாசிக் ஹிஸ்ட்ரி!

மீனா, ரஜினிகாந்தை முதலில் எப்படி அழைத்தேன், இப்போது எப்படி அழைக்கிறேன் என்று கூறிய நிலையில், அதே நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை பயமுறுத்திய சம்பவம் குறித்து நடிகை ராதிகா கூறியுள்ளார்.

மீனா, ரஜினிகாந்தை முதலில் எப்படி அழைத்தேன், இப்போது எப்படி அழைக்கிறேன் என்று கூறிய நிலையில், அதே நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை பயமுறுத்திய சம்பவம் குறித்து நடிகை ராதிகா கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
tamil cinema Rajinikanth

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்த மீனா, ரஜினிகாந்தை முதலில் எப்படி அழைத்தேன், இப்போது எப்படி அழைக்கிறேன் என்று கூறிய நிலையில், அதே நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் ஸ்ரீதேவியை பயமுறுத்திய சம்பவம் குறித்து நடிகை ராதிகா கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ரஜினிகாந்த் 70 வயதை கடந்த பின்னரும் இன்றும், இளம நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வசூலில் மாஸ் காட்டி வருகிறார். அதேபோல் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், தமிழ் சினிமாவில், நடிக்க வந்து ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது குறித்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோடீஸ்வரி நிக்ச்சியில், நடிகை மீனா மற்றும் ராதிகா இருவரும் பங்கேற்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பதிவில், ராதிகா மீனாவிடம் நீ அவரை என்ன என்று கூப்பிடுவ, ரஜினினு கூப்பிடுவியா அல்லது அங்கிள் என்று கூப்பிடுவாயா என்று கேட்க, முதலில் நான் அங்கிள் என்று கூப்பிட்டேன் இப்போது எல்லோரையும்போல சார் என்று கூப்பிடுகிறேன். இதில் இருந்து மாறுவதற்கு எனக்கு பல காலம் ஆனது. படத்தில் அங்கிள் என்று சொல்லிவிட்டு சார் என்று சொல்ல எனக்கே ஏத்துக்க முடியல.

எஜமான் ஷூட்டிங்கில் கூட அவரை சார் என்று கூப்பிடுவதா? அங்கிள் என்று கூப்பிடுவதா என்பது குறித்து குழப்பம் இருந்தது. இதனால் முதல் ஷெடியூலில் நான் அவரிடம் பேசவே இல்லை. ஆனால் அவர் பேசுவதற்கு இனிமையான மனிதர். செட்டில் ரொம்ப ஜாலியாக இருப்பார் என்று மீனா சொல்ல, அதற்கு ராதிகா, நான் முதலில் அவருடன் போக்கிரி ராஜா நடிக்கும்போது ஸ்ரீதேவி, நான், ரஜினி சார் மூவரும், ஷூட்டிங் முடிந்து, வீட்டுக்கு யார் முதலில் போவது என்பது குறித்து ரேஸ் வைத்துக்கொள்வோம். பயங்கர ஜாலியாக இருக்கும்.

Advertisment
Advertisements

அந்த செட்டில் பாம்பு ஒன்று இருந்தது. எனக்கு பாம்பு என்றால் பயம், ஆனால் வர் பாம்பை பிடித்துக்கொண்டு, பயமுறுத்துவார். அப்படி ஒருநாள் பண்ணும்போது நான் ஓடியே போய்விட்டேன். ஸ்ரீதேவியை அழவைத்துவிட்டார். அழுதால் தான் விடுவார் என்று ராதிகா தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். 

tamil cinema actress Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: