பாடலை வாசித்த வாலி; பாதியில் வெளியேறிய ரஜினிகாந்த்: வைரமுத்து வந்ததால் நடந்தது என்ன?
வாலி பாடல் வரியை வாசிக்க தொடங்கும்போது ரஜினிகாந்த் அறையை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் கோபமான வாலி, அவரிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்டு அசர வைத்துள்ளார்.
வாலி பாடல் வரியை வாசிக்க தொடங்கும்போது ரஜினிகாந்த் அறையை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் கோபமான வாலி, அவரிடம் ஒரே ஒரு கேள்வியை கேட்டு அசர வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுகளுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த வாலிப கவிஞர் வாலி, ரஜினிக்காக ஒரு பாடலை எழுதியதை தொடர்ந்து அந்த பாடலை வாசித்து காட்டியுள்ளார். ஆனால் பாடலை வாசிக்க தொடங்கும்போதே ரஜினிகாந்த் எழுந்து வெளியில் சென்றுள்ளார். இதனால் வாலி என்ன செய்தார் என்பது குறித்து கவிஞர் நெல்லை ஜெயந்தா கூறியுள்ளார்.
Advertisment
இது குறித்து அவர் பேசியுள்ள ஒரு வீடியோவில், பாபா படத்துல வாலி ஒரு பாடல். அந்த பாடலை எழுதிவிட்டு ஸ்டூடியோவுக்கு போனபோது ரஜினிகாந்தும் இருக்கிறார். ரஜினிகாந்த வாலியை வரவேற்று உட்கார வைக்கிறார். ரஜினியிடம் வாலி, என்னயா இப்ப பாட்டை நான் வாசிக்கட்டுமா என்று கேட்க, ரஜினிகாந்த், சரி என்று சொல்கிறார். அதற்கு வாலி, பாட்டு படிப்பேன் ஆனா வாசிச்சு முடிக்கிற வரைக்கும் நீ எந்திரிக்க கூடாது. சரியா என்று கூறியுள்ளார்.
வாலி பயங்கர கோபக்காரர் எல்லோரும் மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். அதனால் தான் எம்ஜிஆர் சிவாஜி என்ற 2 மகா கலைஞர்களுக்கு பாட்டு எழுதியுள்ளார். ரஜினிகாந்த் சரி என்று சொன்னவுடன், வாலி உட்கார்ந்து பாட்டை வாசிக்க ஆரம்பிக்கிறார் முதல் வரியைதான் வாசிக்கிறாரு ஒருத்தர் வந்து ரஜினி காதுல ஏதோ சொல்றாரு. சொன்னஉடனே ரஜினி அண்ணே ஒரு நிமிஷம் என்று சொல்லி எழுந்திருக்கிறார்.
அதை பார்த்த வாலி, இப்பதானயா சொன்னேன் முழுசா பாட்ட படிக்கும் வரை எந்திரிக்க கூடாதுன்னு, என்று வாலி கேட்க, உடனே ஒரே ஒரு நிமிஷம் சொல்லிட்டு ரஜினிகாந்த் வெளியே போகிறார். அங்கே கவி பேரரசு வைரமுத்து பாடலோடு வந்திருக்கிறார் வைரமுத்துவை வரவேற்புரையில் உட்கார வைத்துவிட்டு வாலி இருக்கிற அறைக்கு வந்த ரஜினிகாந்த் வந்து அண்ணே சிங்கமும் புலியும் இன்னைக்கு சந்திக்க போகுது என்று சொல்கிறார். உடனே வாலி என்னயா வைரமுத்து வந்திருக்காரா? என்று கேட்ட வாலி, இதை கேட்டுவிட்டு அடுத்த கேள்வியை ரஜினி எதிர்பார்க்கவில்லை.
Advertisment
Advertisements
சிங்கமும் புலியும் சந்திக்க போதுன்னு சொன்னே, நாங்க ரெண்டு பேர்ல யாருயா சிங்கம் என்று வாலி கேட்க, ரஜினி இந்த கேள்வி எதிர்பார்க்கவில்லை. புலியை விட சிங்கம் பெரியது அல்லவா? இல்ல ரெண்டு பேர்தானே என்று ரஜினிகாந்த் சொல்ல, என்னயா ரெண்டு பேர் சிங்கமும் புலியும் சந்திக்க போகுதுன்னே நீதான சொன்ன, அப்ப ரெண்டு பேர்ல யாருயா சிங்கம் என்று கேட்டுவிட்டு, நான் சொல்லட்டுமா நான்தான்யா சிங்கம், தாடி வச்சிருக்கேன்ல என்று கூறியுள்ளார்.
நினைத்து பாருங்கள் இது மின்னல் ஏதாவது யோசிக்கறதுக்கே நேரம் இருக்கா பாருங்க, காரணம் அவர் சொல்லுவார் வாசிப்பு வாசிப்பு வாசிப்பு வாசியுங்கள். கிடைக்கிற புத்தகங்களை எல்லாம் அவர் வாசிப்பார் அதான் அவர் மிகப்பெரிய குணம் என நெல்லை ஜெயந்தா கூறியுள்ளார்.