Advertisment
Presenting Partner
Desktop GIF

எனக்கு பி.சுசீலா தான் பாடனும்: சண்டைக்கு போன சரோஜா தேவி; இறுதியில் ட்விஸ்ட் வைத்த படக்குழு!

பி.சுசீலாதான் எனக்கு பாட வேண்டும். உங்களை யார் வேறு பாடகி வைத்து பாடலை பதிவு செய்ய சொனனது என்று சரோஜா தேவி படக்குழுவிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Saroja Devi P Susee

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜியுடன் பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகை சரோஜா தேவி, பெரும்பாலாலும் தனக்கு பி.சுசீலாதான் பாட வேண்டும் என்று விரும்பக்கூடியவர். ஆனால் ஒரு படத்தில் வேறு ஒரு பாடகி பாடியதால் கோபப்பட்டு படக்குழுவினரிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.

Advertisment

எம்.ஜி.ஆர் நடிப்பில் திருடாதே, நாடோடி மன்னன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் சரோஜா தேவி. அதேபோல் சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ள இவர் ஒரு கட்டத்தில் கேரக்டர் நடிகையாகும் வலம் வந்தவர். மேலும் தொடக்கத்தில் சரோஜா தேவி படங்களில் பாடல் காட்சிக்கு அவருக்கு குரல் கொடுத்தவர் பி.சுசீலாதான். இதன் காரணமாக இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில் எம்.ஜி.,ஆர் திரைத்துறையில் இருந்து விலகி அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில், சரோஜா தேவி மற்ற நடிகர்களின் படங்களில் பிஸியாக நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிபடங்களை கொடுத்திருந்த இவர், 1997-ம் ஆண்டு விஜய் சிவாஜி நடிப்பில் வெளியான ஒன்ஸ்மோர் என்ற படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், அதன்பிறகு அவர் தமிழ் படத்தில் நடிக்கவில்லை.

கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து 2009-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான, ஆதவன் படத்தில் சூர்யாவின் பாட்டியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஒரு பாடல் காட்சியும் இருக்கும். இந்த பாடலை சந்தியா என்பவர் பாடியிருந்தார். இந்த பாடலை கேட்ட சரோஜா தேவி, ஏன் பி.சுசீலாவுக்கு இந்த பாடலை கொடுக்கவில்லை. எனக்கு சுசீலா பாடினால் தான் சரியாக இருக்கும் என்று கூறி படக்குழுவிடம் சண்டைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு படக்குழு இவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

பி.சுசீலாவை தொடர்கொண்டோம். அவர் கிடைக்கவில்லை அவருக்கு பதிலாகத்தான் சந்தியாவை புக் செய்தோம் என்று சொல்லி அவரை படப்பிடிப்புக்கு அழைத்து சென்றுள்ளனர். வேறு பாடகி பாடியதால் பாடல் எப்படி வந்திருக்குமோ என்ற பயத்துடனே சரோஜா தேவி இந்த பாடல் காட்சியில் நடித்துள்ளார். அதன்பிறகு தான், இந்த பாடலை பாடிய பாடகி சந்தியா, பி.சுசீலாவின் மருமகள் என்று சரோஜா தேவிக்கு தெரியவந்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

saroja devi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment