Advertisment

விரக்தியில் தவறு செய்த இயக்குனர்... சுட்டிக்காட்டிய சாவித்ரி ஜெமினி கணேசன் படத்திற்கு செய்த உதவி

பல படங்களில் தனது கம்பீரமாக நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகை வரலட்சுமி, இந்த படத்தின் படப்பிடிப்பில் ரொம்பவும் மந்தமாக இருந்துள்ளார்

author-image
WebDesk
New Update
Savitri Gemini

பணமா பாசமா படம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

க்ளாசிக் சினிமாவில் நடிகையர் திலகம் என்ற அடைமொழியுடன் வலம் வந்த நடிகை சாவித்ரி, தான் நடிக்கவில்லை என்றாலும், தனக்கு தெரிந்த ஒரு இயக்குனரின் திரைப்படத்தில் ஒரு நடிகை சரியாக நடிக்கவில்லை என்பதை தெரிந்துகொண்டு அந்த பிரச்சனையை சரி செய்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் நடிகர் திகலம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்ரி என்று இருப்பது போல இயக்குனர் திலகமாக இருந்தவர் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவரை, பல வெற்றிப்படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியர் ஜி.பாலசுப்பிரமணியம் ஒருமுறை சந்தித்துள்ளார். அப்போது தனக்கு ரூ3 ஆயிரம் பணம் வேண்டும். இதற்கு பதிலாக உங்களுக்கு ஒரு கதை எழுதி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

பொதுவாக கதாசிரியர்களை மிகவும் மதிக்கும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஜி.பாலசுப்பிரமணியம் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு, அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பணத்திமிறில் இருக்கும் ஒரு பெண்னை பற்றி, ஜி.பாலசுப்பிரமணியம் சொல்ல, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு இந்த கேரக்டர் மிகவும் பிடித்துள்ளது. இதனால் நீங்கள் எனக்கு கதை எழுதி கொடுக்க வேண்டாம். இந்த கேரக்டரை வைத்து நான் கதை எழுதிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அடுத்த 15 நாட்கள் கழித்து மீண்டும் ஜி.பாலசுப்பிரமணியத்தை அழைத்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தான் எழுதிய கதையை சொல்ல, அவருக்கும் கதை பிடித்துள்ளது. இதன்பிறகு அடுத்த சில நாட்கள் இந்த படத்தின் திரைக்கதைக்காக இருவரும் பணியாற்றியதை தொடர்ந்து, ஜெமினி கணேசன், சரோஜா தேவி, வரலட்சுமி, டி.கே.பகவதி, நாகேஷ் ஆகியோர் படங்களுடன் பணமா பாசமாக என்ற டைட்டிலுடன் படத்தின் விளம்பரம் வந்துள்ளது.

அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கியபோது, பல படங்களில் தனது கம்பீரமாக நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகை வரலட்சுமி, இந்த படத்தின் படப்பிடிப்பில் ரொம்பவும் மந்தமாக இருந்துள்ளார், நாளுக்கு நாள் இதே நிலை தொடர்ந்ததால், ஒரு கட்டத்தில் இவரை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், அந்த கேரக்டரில் சாவித்ரியை நடிக்க வைக்க நினைத்து அவரை அணுகியுள்ளார். இதை கேட்ட சாவித்ரி, இந்த படத்தின் நாயகன் என் கணவர் ஜெமினி கணேசன், அவருக்கு ஜோடியாக நான் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதை விட்டுவிட்டு, அவருக்கு மாமியாராக நடித்தால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் இந்த படம் எப்படி வெள்ளியாகும் என்று கேட்டுள்ளார்.

அப்போது தான் உணர்ச்சி மிகுதியில் தான் செய்த தவறை உணர்ந்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு, வரலட்சுமியை சந்தித்து பேசிவிட்டு செல்லலாம் என்று அவர் வீட்டுக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் செல்ல, அந்த வீட்டில் இருந்து சாவித்ரி வெளியில் வருகிறார். நாளை நடிகை வரலட்சுமி சிறப்பாக நடிப்பார். அதற்கு நான் பொறுப்பு அப்படி நடிக்கவில்லை என்றால் அந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன்.

அந்த படத்தில் நான் நடிக்கும்போது ஜெமினி கணேசனுக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்று அவரிடமே கேட்டுக்கொள்ளலாம் என்று சாவித்ரி கூறியுள்ளார். இதற்கு இயக்குனரும் ஓ.கே என்று கூறியுள்ளார். மறுநாள் படப்பிடிப்பு தொடங்க, அனைவரும் எதிர்பார்த்ததைவிட வரலட்சுமி சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். 1968-ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தான் நடிக்கவில்லை என்றாலும் சாவித்ரி இந்த படத்திற்காக உதவி செய்ததற்கு முக்கிய காரணம் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மீது அவருக்கு இருந்த மரியாதை தான் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Savithri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment