Advertisment

பி. சுசிலாவே நிறைய டேக் எடுத்த பாடல்: தேவிகா நடித்த அசத்தல் ஹிட் பாடல் பின்னணி

எப்படிப்பட்ட பாடலாக இருந்தாலும் அதை தனது குரலால் சிறப்பாக பாடி பாராட்டுக்களை பெறுவதில் வல்லவரான பி.சுசிலா பல டேக்கள் வாங்கி பாடிய ஒரு பாடல் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
P Suseela

இதயத்தில் நீ படத்தில் சித்திர பூவிழி பாடல்

தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரல் மூலம பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளவர் பாடகி பி.சுசிலா. 1956-ம் ஆண்டு தமிழில் வெளியான தெனாலி ராமன் என்ற படத்தின் மூலம் பாடகியாக தனது பயணத்தை தொடங்கிய இவர், தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் பெரிய ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

Advertisment

க்ளாசிக் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்த எம்.எஸ்.வி ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன், இன்றைய இசையமைப்பாளர்கள் இளையராஜா, ,ஆர்.ரஹ்மான் வரை பலரின் படங்களில் பாடல்களை பாடியுள்ள சுசிலா, எப்படிப்பட்ட பாடலாக இருந்தாலும் அதை தனது குரலால் சிறப்பாக பாடி பாராட்டுக்களை பெறுவதில் வல்லவரான பி.சுசிலா பல டேக்கள் வாங்கி பாடிய ஒரு பாடல் இருக்கிறது.

முன்னணி இயக்குனராக முக்தா சீனிவாசன், இயக்கத்தில் கடந்த 1963-ம் ஆண்டு வெளியான படம் இதயத்தில் நீ. ஜெமினி கணேசன், தேவிகா, எம்.ஆர்.ராதா, லக்ஷ்மி ராஜ்யம், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

6 பாடல்கள் கொண்ட இந்த படத்தில் இரு பாடல்களை பி.சுசிலா பாடியிருந்தார். இதில் சித்திரை பூவிழி என்ற பாடலை சக பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடியிருந்தார். இரு தோழிகளில் ஒருவர் காதல் வயப்பட மற்றொரு தோழி உன்னை கவர்ந்தவன் யார் என்பது குறித்து பாடுவதும் அதற்கு காதல் வயப்பட்ட தோழி பதில் சொல்லி பாடுவதுபோல் இந்த பாடல் அமைந்துள்ளது.

கவிஞர் மாயவநாதன் எழுதிய இந்த பாடலில் தோழிக்கு எல்.ஆர்,ஈஸ்வரியும், காதல் வந்த பெண்ணுக்கு பி.சுசிலாவும் பாடியிருந்தனர். இலக்கிய வார்த்தைகள் அதிகம் நிரம்பிய இந்த பாடலை பாட பாடகி பி.சுசிலா பல டேக்குகள் வாங்கியுள்ளார். ஆந்திராவை சேர்ந்தவர் பி.சுசிலா அதனால் அவருக்கு தமிழ் அதிகம் தெரியாது என்பதால் அவருக்கு வரிகள் குறைவாகவும், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் எல்.ஆர்,ஈஸ்வரிக்கு வரிகள் அதிகமாகவும் கொடுக்கப்பட்டது.

ஆனாலும் இந்த பாடலை பாட பி.சுசிலா பல டேக்கள் வாங்கிய கடைசியாக பாடி முடித்துள்ளார். அதே சமயம் இந்த பாடலில் நடித்த நடிகை தேவிகா ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால், வரிகள் எளிமையாக இருக்கும்போது அவருக்கு க்ளோசப் காட்சிகளும், வரிகள் கடினமாக இருக்கும்போது அவரை லாங் காட்சிகளிலும் வைத்து அழகாக காட்சிபடுத்தியிருந்தார் முக்தா சீனிவாசன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment