சிவாஜி படத்தின் படப்பிடிப்பு... திருடன் வந்துவிட்டாரா என கேட்ட நாகேஷ் : சிவாஜி ரியாக்ஷன் என்ன?

தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி புகழ் பெற்றிருந்தாலும், சிவாஜி, தான் நடிக்கும் படங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களை பாராட்டவும், அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பையும் வழங்கிவிடுவார்.

தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி புகழ் பெற்றிருந்தாலும், சிவாஜி, தான் நடிக்கும் படங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களை பாராட்டவும், அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பையும் வழங்கிவிடுவார்.

author-image
WebDesk
New Update
tiruvilaiyadal nagesh

சிவாஜி - நாகேஷ்

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – நாகேஷ் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், ஒருமுறை செட்டில் சிவாஜி இருப்பது தெரியாமல் திருடன் வந்துவிட்டாரா என்று கேட்டுள்ளார். இதற்கு சிவாஜி கொடுத்த ரியாக்ஷன் என்ன?

Advertisment

1952-ம் ஆண்டு வெளியான பாராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவாஜி, குறுகிய காலத்தில் தனது நடிப்புத்திறமையால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆனார். தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி புகழ் பெற்றிருந்தாலும், சிவாஜி, தான் நடிக்கும் படங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களை பாராட்டவும், அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பையும் வழங்கிவிடுவார்.

அந்த வகையில் தான், திருவிளையாடல் படத்தில் நடிகர் நாகேஷின் நடிப்புத்திறமையை பார்த்து, அவரது காட்சிகள் எதையும் வெட்டாமல் அப்படியே படத்தில் வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் திரைத்துறையை தாண்டி சிவாஜி நாகேஷ் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்துள்ளது. பல படங்களில், இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் வெளியான பல படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனிடையே, நடிப்பில் தான் பிஸியாக பல படங்களில் நடித்து வந்த காலக்கட்டத்தில் சிவாஜி படத்திலும் நாகேஷ் நடித்து வந்துள்ளார். அப்போது ஒரு நாள் கால்ஷீட்டை பல படங்களுக்கு பிரித்து கொடுத்திருந்த நிலையில், சிவாஜி படத்திற்கு காலை 9 மணிக்கு கால்ஷீட். ஆனால் வேறொரு படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் நாகேஷ் 11 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.

Advertisment
Advertisements

அப்போது படக்குழு நாகேஷ்காக காத்திருந்த நிலையில்,  உள்ளே சென்ற நாகேஷ், இன்னும் திருடன் வரலையா என்று கேட்டுள்ளார். நாகேஷ் இப்படி பேசுவதை பார்த்து எனக்கு சிலர் ஜாடை காட்டியுள்ளனர். ஆனாலும் இதை புரிந்துகொள்ளாத நாகேஷ், ஒரு நாற்காலியில் கை வைத்துக்கொண்டு திருடன் வரலையா என்று கேட்டபோது அந்த நாற்காலியில் சிவாஜி தான் மேக்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

உடனே நான் சுதாரித்துக்கொண்ட நாகேஷ், அண்ணே திருடன் படத்தில் நீங்கள் சிறப்பாக நடித்திருந்தீர்கள். இனிமேல் நீங்கள் பராசக்தி சிவாஜி அல்ல, திருடன் சிவாஜி என்று கூறியுள்ளார். இதை கேட்ட சிவாஜி, நாகேஷ் எப்படி சமாளிக்கிறார் என்பதை புரிந்துகொண்டு அப்படியா சரி என்று பெருந்தன்மையாக விட்டுள்ளார். இதை கண்டுகொள்ளாமல் விட்டு சிவாஜி பெரிய மனிதாராக மாறியிருந்த நிலையில், ஒரு பெரிய நடிகரை இப்படி சொல்லிவிட்டோமே என்று நாகேஷூம் வருத்தப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivaji Ganesan actor nagesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: