Advertisment

நான் கெட்டுப்போன பொண்ணா? சாவித்ரி கேட்ட கேள்வி : சிவாஜி என்ன செய்தார்?

ஜெமினி கணேசன் மீது இருந்த மோகத்தின் காரணமாக அவருக்கு எத்தனை மனைவி எத்தனை பிள்ளைகள் என்று சித்திக்காமல் அவரை திருமணம் செய்துகொண்டார் சாவித்ரி.

author-image
WebDesk
New Update
Sivaji Savithri

சிவாஜி - சாவித்ரி

சிவாஜியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நடிகை சாவித்ரி பாசமலர் என்ற படத்தின் அவரின் தங்கையாக நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார். சினிமாவின் உச்சத்தில் இருந்த சாவித்ரி நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே 2 முறை திருமணமான ஜெமினி கணேசன் 3-வதாக சாவித்ரியை திருமணம் செய்துகொண்டார்.

Advertisment

ஜெமினி சணேசனின் முதல் மனைவி புஷ்பவள்ளி. அவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் ரேகா என்ற மகள் உள்ளார். அதன்பிறகு ஜெமினி கணேசனுக்கு அவரது சொந்தத்தில் ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். அதிலும் அவருக்கு குழந்தைகள் இருக்கிறது. இந்த இரு திருமணம் குறித்தும் தெரிந்தும் சாவித்ரி அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஜெமினி கணேசன் மீது இருந்த மோகத்தின் காரணமாக அவருக்கு எத்தனை மனைவி எத்தனை பிள்ளைகள் என்று சித்திக்காமல் அவரை திருமணம் செய்துகொண்டார். நடிகையர் திகலம் என்ற நடிகை சற்றும் சிந்திக்காமல் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்டு 2 குழந்தைகளுக்கும் தாயாகிவிட்டார். அதன்பிறகு குடிக்கு அடிமையான சாவித்ரி 1981-ம் ஆண்டு மரணமடைந்தார்.

தனது நடிப்பால், பலரையும் கட்டிப்போட்டு, நடிகையர் திலகம் என்று பெயரெடுத்த சாவித்ரி நான் கெட்டுப்போன பெண்ணா என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் கேட்டுள்ளார். 1964-ம் ஆண்டு சிவாஜி, சாவித்ரி நடிப்பில் வெளியான படம் கை கொடுத்த தெய்வம். கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கிய இந்த படத்தில் சாவித்ரி ஒரு வெகுளியான பெண்ணாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் தான் வயதுக்கு வந்த பெண் என்பதை மறந்து ஊரில் என்ன அனைவருடனும் சகஜமாக பழகும் சாவித்ரி வெகுளியாக நடித்துகொள்வார். இதனால் அவர் கெட்டுப்போன பெண் என்று கூறி ஒரு சிலர் அவரது திருமணத்தை நிறுத்தி வருகின்றனர். அப்படி ஒரு நிலையில், சிவாஜி அவரை பெண் பார்க்க வரும் செய்தி கிடைக்கிறது. அப்போது ஊரில் உள்ள சிலர் அவர் கெட்டுப்போன பெண் என்று கூறி சிவாஜிக்கு மொட்டை கடிதம் எழுதிவிடுகின்றனர்.

இந்த கடிதத்தை பற்றி சிவாஜி தனது தாயாரிடம் சொல்ல, அவரோ நாங்கள் நிச்சயம் செய்வதற்கு முன் நீ அங்கு சென்று அந்த பெண்ணை பார்த்து வா என்று சொல்ல சிவாஜி சாவித்ரியை தேடி வருகிறார். அப்போது இவர் தான் தான் பார்க்க வந்த பெண் என்று தெரியாமல் அவர் காரிலேயே பயணம் செய்யும் சிவாஜி அவரிடம் ஒரு கட்டத்தில் கார் பழுதடைந்ததால், இருவரும் தனியாக நின்று பேசுகின்றனர்.

அப்போது நான் எல்லோரிடமும் நன்றாக பழகுகிறேன். ஆனால் நான் கெட்டுப்போன பெண் என்று சொல்கிறார்கள். இதனால் எனக்கு கல்யாணமே ஆகமாட்டேங்குது எங்க அப்பா என்னை நினைச்சு ரொம்ப கஷ்டப்படுகிறார். ஏன் சார் நான் கெட்டுப்போன பெண்ணா என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது என்று கேட்கிறார். அதற்கு சிவாஜி இல்லமா ன்று சொல்ல, என்ட ஒரு நாய் குட்டி இருக்கு அது மட்டும் தான் என்னிடம் நல்ல பழகும் என்று சொல்கிறார். அந்த நாய் மட்டும் தான் என்னை முழுசா புரிந்துகொண்ட ஜீவன் என்று சொல்கிறார் சிவாஜி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivaji Ganesan Savithri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment