Advertisment

பட்டது போதும்... இனி வேண்டாம்... நடிப்பை விட்டு விலகிய சிவாஜி நடிகர் திலகம் ஆனது எப்படி?

பராசக்தி படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் சிவாஜி கணேசன்

author-image
WebDesk
New Update
Sivaji Ganesan Action

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம், நடிப்பு பல்கலைகழகம் என்று பல பட்டங்களை பெற்றுள்ள சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் ஏற்று நடிக்காத கேரக்டர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல்துறை வித்தகராக இருந்துள்ளார். ஆனால் அவர் ஒரு கட்டத்தில் நடிப்பே வேண்டாம் என்று ஒதுங்கி மெக்கானிக்காக வேலை செய்த சம்பவங்களும் நடந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

Advertisment

தமிழ் சினிமாவில் நடிகர் திகலம் என்று போற்றப்படும் முக்கிய நடிகர் சிவாஜி. நாடக நடிகராக இருந்து 50-களில் வெளியான பராசக்தி படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இவர்க்ளாசிக் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர்.

திரைப்படங்களில் தான் பேசும் வசனங்களில் மட்டுமல்லாமல் உடல் மொழியிலும் வித்தியாசத்தை வெளிப்படுத்திய சிவாஜி நடிகர் திகலம் என்று அழைக்கப்பட்டார். அவரை நடிப்பைதான் இன்றைய நடிகர்கள் பலரும் ஃபாலே செய்து வருகின்றனர். மேலும் தனது இறுதி காலம் வரை நடிப்பில் தனக்கான தனி அடையாளத்தை காட்டிய சிவாஜி, 7 வயதில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி நாடக சபையில் சேர்ந்தவர்.

மதுரையில் ஸ்ரீபாலகனா நாடக சபையில் சின்ன பொன்னுசாமி என்பர் சிவாஜிக்கு நடிப்பு பயிற்சி கொடுத்துள்ளார்.  இந்த நாடக சபாவில் தான் எம்.ஆர்.ராதாவும் நடித்து வந்தார். சிவாஜி எம்.ஆர்,ராதா இருவரும் அந்த நாடக சபாவில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் சபாவுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக எம்.ஆர்.ராதா நாடக சபாவில் இருந்து வெளியில் வந்துவிட அவருடன் சிவாஜியும் வரவேண்டும் என்று விரும்பினார்.

அதனால் நான் இந்த சபாவில் இருந்து விலகுகிறேன். என்னுடன் யார் வருகிறீர்கள் என்று கேட்டபோது அனைவரும் பதில் அளிக்கும் முன்னனே அந்த நாடக சபாவின் முதலாளி நீ மட்டும் போ இங்கிருந்து யாரும் வர மாட்டார்கள் என்று சொல்லிவிட்டார். அவரை எதிர்த்து சிவாஜியும் பேச முடியாமல் அங்கேயே இருந்துவிட்டார். எம்.ஆர்.ராதா கிளம்பிதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த கிருஷ்ணன் பிள்ளை என்பவரின் தலைமையில் நாடக சபா கேரளாவுக்கு புறப்பட்டது.

அங்கு பல ஊர்களில் நாடகம் நடத்தப்பட்டது. அப்போது மனோகரா என்ற நாடகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நாடகத்தில் பொதுவாக மனோகராவின் அம்மா வேடத்தில் தான் சிவாஜி நடிப்பார். ஆனால் இந்த முறை கிருஷ்ணன் பிள்ளை அவரிடம் சென்று மனோகரா வசனத்தை பேசி நடித்து காட்டு என்று சொன்னதும், சிவாஜி தனது திறமையை வெளிப்படுத்த கிருஷ்ணன் பிள்ளை அவரை பாராட்டி இனி நீதான் மனோகரன் என்று சொல்விட்டார்.

நாடகம் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தை பார்க்க வந்த கொல்லங்கோடு மகராஜா சிவாஜியின் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டி ஒரு வெள்ளி தட்டை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். அதன்பிறகு மழை காரணமாக நாடகம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால், சிவாஜியின் நாடக நண்பரான கே.ஏ.தங்கவேலுவின் அம்மா அவர்களை அழைத்து போக கேரளாவுக்கு வந்துள்ளார். அப்போது மழை காரணமாக காட்டுப்பாதையில் நடந்து பொள்ளாச்சி வரை வர வேண்டும்.

அப்படி நடந்து வரும்போது தங்கவேலுவுக்கு பாம்பு கடித்துவிட, உடனடியாக சிவாஜி அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள கிராமத்திற்கு செல்கிறார். இவர்கள் நாடக கலைஞர்கள் என்று தெரிந்துகொண்டு வைத்தியம் பார்த்து வழிச்செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்புகிறார்கள். அதன்பிறகு நடந்தே பொள்ளாச்சி வந்த சிவாஜி தங்கவேலு அவரது அம்மா மூவரும் பொள்ளாச்சியில் சிலருடன் நாடகம் போட்டு பணம் சேர்த்து திருச்சி வந்துள்ளனர்.

இந்த பயணத்தில் ஏற்பட்ட சலிப்பு காரணமாக இனி நடிப்பே வேண்டாம் என்று நினைத்த சிவாஜி திருச்சியில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் மெக்கானிக்காக சேர்கிறார். ஆனாலும் நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் குறையாத நிலையில், ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் தனது பழைய நாடக சபா கலைஞர்களாக பார்க்கும் வாய்ப்பினை பெற்ற சிவாஜி அவர்களுடன் சேர்ந்து மீண்டும் தனது நடிப்பை தொடங்கினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivaji Ganesan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment