ஒரு பாட்டுக்கு 4 டியூன்... அசத்திய எம்.எஸ்.வி... குழம்பிய கண்ணதாசன் : தபால்காரர் கொடுத்த தீர்வு
1967-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கே.ஆர் விஜயா இணைந்து நடித்த திரைப்படம் தங்கை. தயாரிப்பார் நடிகர் என பன்முக திறமை கொண்ட கே.பாலாஜி இந்த படத்தை தயாரித்திருந்தார்.
சிவாஜி நடித்த ஒரு படத்தின் பாடல் கம்போசிங்கின்போது, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் 4 டியூன்கள் போட்டுள்ளார். இதில் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் கவிஞர் கண்ணதாசன் என 4பேருக்கும் ஆளுக்கொரு டியூன் பிடித்திருந்த நிலையில், இந்த 4 டியூன்களில் ஒரு டியூனை தபால்காரர் ஒருவர் தேர்வு செய்துள்ளார்.
Advertisment
1967-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கே.ஆர் விஜயா இணைந்து நடித்த திரைப்படம் தங்கை. தயாரிப்பார் நடிகர் என பன்முக திறமை கொண்ட கே.பாலாஜி இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க அதனைத்து பாடல்கயும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில்,அதனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்திற்கான பாடல் கம்போசிங்கில் இருந்தபோது ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் 8 டியூன்களை போட்டுள்ளார். இதில் 4 டியூன்களில், கண்ணதாசன், தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் திரிலோகச்சந்தர், இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஆகிய நாள்வருக்கும் ஒவ்வொரு டியூன் பிடித்துள்ளது. ஆனால் இதில் எதை தேர்வு செய்வது என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு குழப்பத்தில் இருந்துள்ளார். அப்போது தபால் டெலிவரி கொடுப்பதற்காக தபால்காரர் வந்துள்ளார்.
அவரை பார்த்த கவியரசர் கண்ணதாசன், கொஞ்சம் நில்லுப்பா என்று சொல்லிவிட்டு,எம்.எஸ்.வியிடம் அந்த தேர்வு செய்யப்பட்ட 4 டியூன்களையும் வாசிக்க சொல்லியுள்ளார். எம்.எஸ்.வியும் அந்த 4 டியூன்களை வாசிக்க,அந்த தபால்காரர் ஒரு டியூனை தேர்வு செய்துள்ளார். அது இயக்குனர் திரிலோகச்சந்தர் தேர்வ செய்த டியூனை தபால்காரர் தேர்வு செய்திருந்தார். அந்த பாடல் தான் கேட்டவரெல்லாம் பாடலாம் என்ற பாடல். இந்த பாடல் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்றும் ரசிக்கக்கூடிய ஒரு பாடலாக உள்ளது. தொடர்ந்து அடுத்த பாடலுக்கான கம்போசிங் நடைபெறும்போது எம்.எஸ்.வி டியூனை வாசித்துள்ளார். இதை கேட்ட பாலாஜி அருமையாக இருக்கிறது இதை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல,உடனடியாக அருகில் இருந்த கண்ணதாசன் என்ன ஆச்சு இன்னும் அந்த தபால்காரர் வரவில்லையா என்று கேட்க அங்கிருந்த அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“