க்ளாசிக் சினிமாவில், கண்ணதாசனுக்கு நிகராக கவித்துவத்தில் ஆதிக்கம் செலுத்திய பல கவிஞர்கள் பெயர் வரலாற்றில் இருந்து காணாமல் போய்விட்டது. அந்த வரிசையில் இடம் பெற்றவர் தான் மாயவநாதன். இவரை பற்றி இன்றைய காலக்கட்ட ரசிகர்களுக்கு தெரியாது என்றாலும், இவர் எழுதிய பாடல்களை இவர் தான் எழுதியது என்று தெரியாமலே கேட்டுக்கொண்டு இருக்கிறோம் என்று சொல்லாம்.
Advertisment
கோபக்காரரான மாயவநாதன் கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய ஒரு படத்திற்கு பாடல் எழுத வந்து, இசையமைப்பாளர் கிண்டல் செய்ததால், இங்கிருந்து கோபித்துக்கொண்டு வெளியேற அவர் எழுதாமல் போன அந்த பாடலை கலைஞர் கருணாநிதி எழுதி, ஹிட் கொடுத்துள்ளார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 1966-ம் ஆண்டு முரசொலிமாறன் இயக்கத்தில் வெளியான படம் மறக்க முடியுமா? கருணாநிதி இந்த படத்திற்கு வசனம் எழுதியிருந்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இருந்து பிரிந்த டி.கே.ராமமூர்த்தி இசையமைத்த இந்த படத்திற்கு 2 பாடல்கள் எழுத ஒப்பந்தமாகியுள்ளார் கவிஞர் மாயவநாதன். முதல் பாடலை அவர் எழுதி முடித்தவுடன் கம்போசிங் நடந்து பாடல் பதிவு முடிந்துள்ளது. அந்த காலக்கட்டத்தில் அரசியலில், தீவிரமாக செயல்பட்டு வந்த கருணாநிதி, 1967-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பல அரசியல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். இதன் காரணமாக பாடல் எழுதி கம்போசிங் முடியுங்கள் நான் மாலையில் வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து டி.கே.ராமமூர்த்தி – கவிஞர் மாயவநாதன் இருவரும் பாடல் கம்போசிங்கிற்காக அமரும்போது, நான் பாடல் எழுதுகிறேன். அதன்பிறகு டியூன் போடுங்கள் என்று மாயவநாதன் சொல்ல, நான் டியூன் தருகிறேன் அதற்கு நீங்கள் பாடல் எழுதுங்கள் என்று டி.கே.ராமமூர்த்தி கூறியள்ளார். இது பிடிக்கவில்லை என்றாலும் மாயவநாதன் ஒப்புக்கொள்ள, ராமமூர்த்தி டியூன் போட்டுள்ளார். டியூனை வாசிக்கும்போது டம்மி வார்த்தைக்கு பதிலாக மாயவநாதன் பெயரையே பாடலாக மாற்றி கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இதை கேட்ட மாயவநாதன், டியூனுக்கு பாடல் எழுத ஒப்புக்கொண்டாலும், இவர் பாட்டிலேயே கிண்டல் செய்கிறார் என்று நினைத்து இனிமேல் என்னால் இங்கு பாடல் எழுத முடியாது என்று கிளம்பி சென்றுவிடுகிறார். இதன்பிறகு மாலையில், கருணாநிதி போன் செய்து பாடல் ரெடியாக என்று கேட்க, டி.கே.ராமமூர்த்தி நடந்ததை கூறியுள்ளார். அதன்பிறகு கவிஞர் மாயவநாதனை தேடி பிடிக்க ஆள் அனுப்பினாலும் அவர் பற்றி எந்த தகவலும் இல்லை. இதன் பிறகு என்ன டியூன் போட்டிங்க என்று கேட்க, ராமமூர்த்தி டியூனை வாசித்துள்ளார். இந்த டியூனை கேட்க, கருணாநிதி ஒரு மணி நேரத்தில் அந்த பாடலை எழுதி கொடுத்துள்ளார்.
அந்த பாடல் தான் மறக்க முடியுமா படத்தில் இடம்பெற்ற ‘’காகித ஓடம் கடலலை மீது போவது போலே’’ என்ற பாடல். தமிழ் சினிமாவின் க்ளாசிக் சோக பாடல்களை எழுத்துக்கொண்டால் இந்த பாடலுக்கு நிச்சயமாக முன்னணியில் இடம் உண்டு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“