டி.எம்.எஸ் பாடுவதை நிறுத்தியது எப்போது? அதற்கு காரணம் யார்? அவரே சொன்ன விளக்கம்

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் சத்யராஜ் என 4 தலைமுறை நடிகர்களுக்கு தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் டி.எம்.சௌந்நதிர்ராஜன்

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் சத்யராஜ் என 4 தலைமுறை நடிகர்களுக்கு தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் டி.எம்.சௌந்நதிர்ராஜன்

author-image
WebDesk
New Update
TMS

தமிழ் சினிமாவில் 4 தலைமுறை நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த டி.எம்.சௌந்திர்ராஜன் ஒரு கட்டத்தில் தான் பாடுவதை நிறுத்திக்கொண்டது ஏன் என்பது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் அவர் டி.எம்.சௌந்திரராஜன் தான். சிவாஜிக்கு, அவர் மாதிரியும், எம்.ஜி.ஆருக்கு அவர் மாதிரியும் பாடல்கள் பாடி அசத்தியுள்ள இவர்தமிழ் சினிமாவில் 70-க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் அவர்கள் பாடுவது போன்றே பாடி அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேபோல் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களுக்கு தனது குரலின் மூலம் உயிர் கொடுத்துள்ள, டி.எம்.சௌந்திரரஜன், எம்.எஸ்.வி இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். 

அதேபோல், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் சத்யராஜ் என 4 தலைமுறை நடிகர்களுக்கு தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள டி.எம்.சௌந்நதிர்ராஜன், ஒரு கட்டத்திற்கு மேல் பாடல் பாடுவதை நிறுத்திக்கொண்டார். அவருடன் பாடிய பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்ட பாடகளின் தொடர்ந்து பாடல் பாடிக்கொண்டிருந்தாலும், டி.எம்.எஸ் பாடுவதை நிறுத்தியது ஏன் என்பது குறித்து ஒரு பேட்டியில் அவரே தெரிவித்துள்ளார்.

1989-ம் ஆண்டு ஊமை விழிகள் இயக்குனர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில் வெளியான படம் தாய்நாடு. சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், ராதிகா, நம்பியார், ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மனோஜ் கெய்ன் இசையமைத்த இந்த படத்திற்கு, ஆபாவாணன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படத்தின் 5 பாடல்களையும் டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்த நிலையில், பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisment
Advertisements

இந்த படம் வெளியானபோது, புதிய இசையமைப்புடன் 4 படங்கள் வெளியானது. ஆனால் அந்த படங்களின் பாடல்கள் பெரியதாக கவனம் ஈர்க்காத நிலையில், தாய்நாடு படத்தின் பாடல்கள் பெரய ஹிட் அடித்துள்ளது. அப்போது பின்னணி பாடகர்கள் சிலர் ஆபாவானணிடம் சென்று, அவரை ஏன் மீண்டும் பாட அழைத்தீர்கள், அவர் வந்து பாடினால் எங்களுக்கு பிழைப்பு இருக்காது. 45 வருடங்கள் பாடிவிட்டார். இனியும் அவரை ஏன் அழைக்கிறீர்கள் என்று சொன்னதாக ஆபாவாணன் தன்னிடம் கூறியதாக டி.எம்.எஸ்.கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்வக்கு பின் தமிழ் சினிமாவில் தன்னை யாரும் பாட அழைக்கவில்லை என்றும் டி.எம்.எஸ்.கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

T M soundararajan tamil cinema actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: