கண்ணதாசன் பாட்டில் பிழை; நேரடியாக சுட்டிக் காட்டிய வாலி; ஆனா அந்தப் பாட்டு எவர்கிரீன் ஹிட்!

கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலில் பிழை இருக்கிறது என்று கவிஞர் வாலி கண்ணதாசனிடமே கூறியுள்ளார்.

கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலில் பிழை இருக்கிறது என்று கவிஞர் வாலி கண்ணதாசனிடமே கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kannadasan Vaali

கவியரசர் கண்ணதாசனுக்கு எதிராக பாடல் எழுத வந்திருந்தாலும், பின்னாளில் அவருடன் நெருக்கமான நட்பில் இருந்த கவிஞர் வாலி, கண்ணதாசன் எழுதிய பாடலில் பிழை இருக்கிறது என்று அவரிடமே சுட்டிக்காட்டியுள்ளார். அது என்ன பாடல்? என்ன படம்?

Advertisment

1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் மன்மத லீலை. கமல்ஹாசன், ஆலம், ஹேமா சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் ப்ளேபாய் வேடத்தில் நடித்திருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருப்பார். தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகம் இருக்கும் நாயகன் மனைவி இருந்தாலும், தான் பார்க்கும் பெண்கள் அனைவரையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

அந்த வகையில் ஒரு பெண்ணுடன் கமல்ஹாசன் பழகுகிறார். அவரிடம் அன்பாக பேசும்போது, நன்றாக படித்து ஒரு நல்ல வேலையில் இருக்கும் அவருக்கு, கணவன், குடிகாரனமாக அமைந்து விட்டதாக அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார்.இவரை அடைய வேண்டும் என்று நினைக்கும் கமல்ஹாசன், அதற்காக அவருடன் நெருங்கி பழகுகிறார். அப்போது அவர் எனக்கு இன்னொரு கணவன் இந்த ரேடியோதான் என்று சொல்கிறார். ரோடியோ என்ன கம்பெனி என்று கமல்ஹாசன் கேட்க அவர் பிலிப்ஸ் என்று சொல்கிறார்.

அதை கேட்ட கமல்ஹாசன், அப்போ நீங்க மிஸஸ் பிலிப்ஸ் என்று சொல்கிறார். அதன்பிறகு தான் ‘’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'', என்ற பாடல் ஒலிக்கும். அதன்பிறகு அந்த பெண்ணின் கணவன் குடித்துவிட்டு இருப்பதும், அவரை கமல்ஹாசனும் அந்த பெண்ணும் அழைத்து வந்து படுக்க வைக்கும் காட்சிகள் வரும். இந்த பாடல் முழுவதுமே கமல்ஹாசன் அந்த பெண்னை அடைவதற்காக எப்படி அவரிடம் பேசுகிறார் என்பதையே பாடல் வரிகளாக வைத்திருப்பார் கண்ணதாசன்.

Advertisment
Advertisements

கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் இந்த படத்தில் மனைவி அழகாக அமைந்திருந்தாலும், அவருக்கு ஏற்ற கணவன் தான் அமையவில்லை. அதனால் கணவன அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம், கனவு பளிக்கும் என உனக்கும் வாழ்வும் வரும் என்று தானே வர வேண்டும் என்று கவிஞர் வாலி கண்ணதாசனிடம் கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த கண்ணதாசன், இதை தயாரிப்பாளர்கள் தான்யா பார்த்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதே சமயம், இதற்கு கண்ணதாசன் என்ன விளக்கம் கொடுத்தார் என்பதை வாலி சொல்ல மறுத்துவிட்டார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

kavignar vaali Kannadasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: